Thursday, September 22, 2011

நீயே என் சுவாசம் 02



     அத்தியாயம் 02

சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி..
ஆர்வமாய் கண்களைத்திறந்தவனுக்கோ அதிர்ச்சி.கண்களிர் அனல் பறக்க இருக்கை விட்டெழுந்தாள் மானிஷா
.
“ என்ன மானிஷா அப்ஸட் ஆயிட்டீங்களா..?உங்களைப் 
பிடிச்சிருக்குன்னுதானே சொன்னேன்.அதுக்கு ஏங்க இத்தனை டென்ஷன்…”

“ என்ன சொல்றீங்க …லவ்வா….”விரக்தியாய் சிரித்தாள்

“ டொக்டர் என்ன தப்பா நெனக்காதிங்க…என் லைஃப் இல் லவ்வுங்கிறது வெறும் கானல் நீரா மட்டுமே இருக்கும்…அந்த கானல் நீர் என் தாகம் தீர்க்கும் என்கிற நம்பிக்கையோ…எதிர்பார்ப்போ இல்லை…என்னை மன்னிச்சிடுங்க…”

மேசைமீது வைத்திருந்த தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்தவள் திரும்பிப்பாராமலே சென்றாள்.
திணரிப்போனான் ரிஷி.

“மானிஷா இப்படியெல்லாம் பேசுவாளா…?எவ்வளவு மென்மையானவள்…நான்தான் புரிஞ்சுக்காம தப்பா பேசிட்டேனோ…?சீ..சீ…அப்படி இருக்காது..மானிஷா என்ன லவ் பண்றா…ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படி நடந்துக்குறா…என்னான்னு தெரியலயே…இந்தப்பொண்ணுங்கல புரிஞ்சிக்கவே முடியலயே….”ரிஷி குழம்பிப்போனான்.

தன் தோள் மீது கையொன்று படருவதை உணர்ந்த ரிஷி திரும்பிப் பார்த்தான் பதட்டமாய்.

“ டேய் அர்ஜுன் நீயா….நான் பயந்துட்டேன்….ஆமா..நீ எப்படா வந்த…பிஸினஸ் ட்ரிப் எல்லாம் எப்படி….”ரிஷி ஆவலாய் கேட்டான்…

“ ம்…சூப்பர்…எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது..லட்சத்தை கொடுத்து கோடிகளை அமுக்கிட்டேன்…எப்படியோ கன்ட்ரக்ட் நம்ம கைல…”

“டேய் இது தப்பில்லையா…நியாயமா சம்பாதிக்குற காசுதான்டா ஒடம்புல ஒட்டும்…”

“இப்படி கிரிமினலா யோசிக்கிறது என் சொந்த மூளையால தானே….நியாயப்        படி பார்த்தா…என் சம்பாதிப்பும்…நான் கஷ்டப்பட்டு உழைக்குறதுதான்..இது எப்படிடா ஒடம்புல ஒட்டாமல் போகும் …சும்மா இருடா…”

“அர்ஜுன் நீ என்ன பன்றாய் என்று சொல்லவும் மாட்டேன்கிறாய்…எனக்கு ஒரு எழவும் புரியலை…நண்பனாக சொல்றேன்டா …கைசேதப்படும்படியா நடந்துக்காத…உனக்குத் தெரியாததா என்ன..?”

“ போதும்டா ரிஷி நீ எடுக்கும் லெக்சர்…உன்னமாதிரி நல்லவானா இருந்தா எங்க வயித்துப் பசி போகுமா என்ன? உன்னமாதிரி வசதி… குடும்பம்னு இருந்தா நாங்க ஏன்டா இந்தப் பிழைப்பு பிழைக்கனும்….” அர்ஜுனின் வார்த்தை ரிஷியை காயப்படுத்தியது…

“ ஸொரிடா மச்சான்…காயப்படும்படியான சம்பவங்களால சிதைஞ்சுபோறது மனசுதான் என்றாலும்…வாழ்க்கையின் திசை அப்படிப்பட்ட காரணங்களுக்காக சின்னா பிண்ணமாவதைதான் தாங்க முடியிறதில்லை….
நீயும் திசைமாறிட்டியோன்னுதான்டா மனசு படாத பாடு படுது”

“ நீ கவலைப்படறாதால எந்தவித மாற்றங்களும் வரப்போறதில்லை…இழப்புக்களின் வலி…என்பது லேசுப்பட்டதில்லை…”

“ என்னடா இப்படி சொல்லிட்ட நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இதுக்குள்ள இப்படி பேசுறே…என்னைப் பயமுறுத்தாதடா அர்ஜுன்…”

“ ஓ…கதை இப்படி போகுதா…என்கிட்ட சொல்லவே இல்லே..”

“ நீயும்தான்… என்கிட்ட கேக்கவே இல்லியே…”

“ அப்படியா….ஓக்கே இப்போ கேக்குறேன்…ம்…சொல்லு…” அர்ஜுன் பக்கத்திலிருக்கும் இருக்கையில் தன்னை அமர்த்தி கதை கேட்க ஆர்வமானான்.

“ பொறுடா…இப்பதான்டா முதல் அடியை எடுத்து வெச்சிருக்கேன்…ரொம்ப நல்லவடா..அவள்ட எளிமைதான் அவளுக்கு ரொம்பவும் அழகு…ஆனா அவ ஸைட்ல இருந்து க்ரீன் சிக்னல் இன்னும் கிடைக்கலை…”வருத்தமாய் ரிஷி கூறினான்.

“ நீ ஒரு மடையன்டா…எந்தக்காலத்துலடா நீ இருக்கே..ஏன்டா இப்படி இருக்கே…லவ் பண்ணினா மட்டும் போதுமா…எப்படியாச்சும் கவுக்கிற வழியப்பாருடா…”

“ டேய் என்னை என்னடா பண்ண சொல்றே…”

“ நீ ஒன்னும் பண்ணவேணாம்…அவளோட சகஜமா பேசினாலே போதும்…ஆமா…யாருடா அந்த கொடுத்து வெச்ச மகாராசி……”

“ உனக்கு நல்லாவே தெரியும்டா…எங்க ஹொஸ்பிடல் ஸடாஃப் தான்..”
“யாருடா…எனக்கு தெரியலையே…” பொய்யாய் தன் முடியை பிச்சிக்கொள்வது போல் பாவனை கொடுத்தான்…

“ போதும்டா உன் சேட்டையை ஆரம்பிச்சிடாத…நானே சொல்லிட்றேன்…அவ வேறு யாருமில்லை மானிஷா தான்…”ரிஷி நாணம் கலந்த புன்னகையுடன் பதிலளித்தான். 
  
போயும் யோயும் இவளையா முணு முணுத்த அர்ஜுனின் புருவங்கள் தூக்கி நின்றன.முகத்தில் நிறம் தப்பியதை ரிஷி கவனிக்கத்தவரவில்லை.

“ உண்மையாவா சொல்றே…என்னால நம்ப முடியலைடா…”

“ ஆமான்டா..இதுல பொய்சொல்ல என்னடா இருக்கு….”

“ இல்லடா சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டன்…அப்போ நான் வரட்டா..” அர்ஜுன் கிளம்பத்தயாரானான்

“ டேய் …என்னடா ஆச்சு உனக்கு…உன் உற்சாகம் எப்படிடா திடீரென்று வடிஞ்சு போச்சு…”

“ லேசா தலைவலி…தலைவலி எல்லாம் எப்பொய்மன்ட் எடுத்துக்கிட்டாடா வரும்…ஓக்கே நான் கிளம்புறேன்…”அர்ஜுன் கிளம்பிப் போய்விட்டான்.
ரிஷியிற்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

“மானிஷா பேரை சொன்னதும் அவன் ஏன் டென்ஷனாவுறான்…ரெண்டுபேருக்கும் ஏதாவது ஒரு வகைல தொடர்பு இருந்தாகவேண்டும்..”
இந்த முடிவில் மட்டும்  ரிஷி உறுதியாய் இருந்தான்…
                                                              தொடரும்.....


                                                                      நீயே என் சுவாசம் 03


     அத்தியாயம் 02

சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி..
ஆர்வமாய் கண்களைத்திறந்தவனுக்கோ அதிர்ச்சி.கண்களிர் அனல் பறக்க இருக்கை விட்டெழுந்தாள் மானிஷா
.
“ என்ன மானிஷா அப்ஸட் ஆயிட்டீங்களா..?உங்களைப் 
பிடிச்சிருக்குன்னுதானே சொன்னேன்.அதுக்கு ஏங்க இத்தனை டென்ஷன்…”

“ என்ன சொல்றீங்க …லவ்வா….”விரக்தியாய் சிரித்தாள்

“ டொக்டர் என்ன தப்பா நெனக்காதிங்க…என் லைஃப் இல் லவ்வுங்கிறது வெறும் கானல் நீரா மட்டுமே இருக்கும்…அந்த கானல் நீர் என் தாகம் தீர்க்கும் என்கிற நம்பிக்கையோ…எதிர்பார்ப்போ இல்லை…என்னை மன்னிச்சிடுங்க…”

மேசைமீது வைத்திருந்த தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்தவள் திரும்பிப்பாராமலே சென்றாள்.
திணரிப்போனான் ரிஷி.

“மானிஷா இப்படியெல்லாம் பேசுவாளா…?எவ்வளவு மென்மையானவள்…நான்தான் புரிஞ்சுக்காம தப்பா பேசிட்டேனோ…?சீ..சீ…அப்படி இருக்காது..மானிஷா என்ன லவ் பண்றா…ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படி நடந்துக்குறா…என்னான்னு தெரியலயே…இந்தப்பொண்ணுங்கல புரிஞ்சிக்கவே முடியலயே….”ரிஷி குழம்பிப்போனான்.

தன் தோள் மீது கையொன்று படருவதை உணர்ந்த ரிஷி திரும்பிப் பார்த்தான் பதட்டமாய்.

“ டேய் அர்ஜுன் நீயா….நான் பயந்துட்டேன்….ஆமா..நீ எப்படா வந்த…பிஸினஸ் ட்ரிப் எல்லாம் எப்படி….”ரிஷி ஆவலாய் கேட்டான்…

“ ம்…சூப்பர்…எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது..லட்சத்தை கொடுத்து கோடிகளை அமுக்கிட்டேன்…எப்படியோ கன்ட்ரக்ட் நம்ம கைல…”

“டேய் இது தப்பில்லையா…நியாயமா சம்பாதிக்குற காசுதான்டா ஒடம்புல ஒட்டும்…”

“இப்படி கிரிமினலா யோசிக்கிறது என் சொந்த மூளையால தானே….நியாயப்        படி பார்த்தா…என் சம்பாதிப்பும்…நான் கஷ்டப்பட்டு உழைக்குறதுதான்..இது எப்படிடா ஒடம்புல ஒட்டாமல் போகும் …சும்மா இருடா…”

“அர்ஜுன் நீ என்ன பன்றாய் என்று சொல்லவும் மாட்டேன்கிறாய்…எனக்கு ஒரு எழவும் புரியலை…நண்பனாக சொல்றேன்டா …கைசேதப்படும்படியா நடந்துக்காத…உனக்குத் தெரியாததா என்ன..?”

“ போதும்டா ரிஷி நீ எடுக்கும் லெக்சர்…உன்னமாதிரி நல்லவானா இருந்தா எங்க வயித்துப் பசி போகுமா என்ன? உன்னமாதிரி வசதி… குடும்பம்னு இருந்தா நாங்க ஏன்டா இந்தப் பிழைப்பு பிழைக்கனும்….” அர்ஜுனின் வார்த்தை ரிஷியை காயப்படுத்தியது…

“ ஸொரிடா மச்சான்…காயப்படும்படியான சம்பவங்களால சிதைஞ்சுபோறது மனசுதான் என்றாலும்…வாழ்க்கையின் திசை அப்படிப்பட்ட காரணங்களுக்காக சின்னா பிண்ணமாவதைதான் தாங்க முடியிறதில்லை….
நீயும் திசைமாறிட்டியோன்னுதான்டா மனசு படாத பாடு படுது”

“ நீ கவலைப்படறாதால எந்தவித மாற்றங்களும் வரப்போறதில்லை…இழப்புக்களின் வலி…என்பது லேசுப்பட்டதில்லை…”

“ என்னடா இப்படி சொல்லிட்ட நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இதுக்குள்ள இப்படி பேசுறே…என்னைப் பயமுறுத்தாதடா அர்ஜுன்…”

“ ஓ…கதை இப்படி போகுதா…என்கிட்ட சொல்லவே இல்லே..”

“ நீயும்தான்… என்கிட்ட கேக்கவே இல்லியே…”

“ அப்படியா….ஓக்கே இப்போ கேக்குறேன்…ம்…சொல்லு…” அர்ஜுன் பக்கத்திலிருக்கும் இருக்கையில் தன்னை அமர்த்தி கதை கேட்க ஆர்வமானான்.

“ பொறுடா…இப்பதான்டா முதல் அடியை எடுத்து வெச்சிருக்கேன்…ரொம்ப நல்லவடா..அவள்ட எளிமைதான் அவளுக்கு ரொம்பவும் அழகு…ஆனா அவ ஸைட்ல இருந்து க்ரீன் சிக்னல் இன்னும் கிடைக்கலை…”வருத்தமாய் ரிஷி கூறினான்.

“ நீ ஒரு மடையன்டா…எந்தக்காலத்துலடா நீ இருக்கே..ஏன்டா இப்படி இருக்கே…லவ் பண்ணினா மட்டும் போதுமா…எப்படியாச்சும் கவுக்கிற வழியப்பாருடா…”

“ டேய் என்னை என்னடா பண்ண சொல்றே…”

“ நீ ஒன்னும் பண்ணவேணாம்…அவளோட சகஜமா பேசினாலே போதும்…ஆமா…யாருடா அந்த கொடுத்து வெச்ச மகாராசி……”

“ உனக்கு நல்லாவே தெரியும்டா…எங்க ஹொஸ்பிடல் ஸடாஃப் தான்..”
“யாருடா…எனக்கு தெரியலையே…” பொய்யாய் தன் முடியை பிச்சிக்கொள்வது போல் பாவனை கொடுத்தான்…

“ போதும்டா உன் சேட்டையை ஆரம்பிச்சிடாத…நானே சொல்லிட்றேன்…அவ வேறு யாருமில்லை மானிஷா தான்…”ரிஷி நாணம் கலந்த புன்னகையுடன் பதிலளித்தான். 
  
போயும் யோயும் இவளையா முணு முணுத்த அர்ஜுனின் புருவங்கள் தூக்கி நின்றன.முகத்தில் நிறம் தப்பியதை ரிஷி கவனிக்கத்தவரவில்லை.

“ உண்மையாவா சொல்றே…என்னால நம்ப முடியலைடா…”

“ ஆமான்டா..இதுல பொய்சொல்ல என்னடா இருக்கு….”

“ இல்லடா சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டன்…அப்போ நான் வரட்டா..” அர்ஜுன் கிளம்பத்தயாரானான்

“ டேய் …என்னடா ஆச்சு உனக்கு…உன் உற்சாகம் எப்படிடா திடீரென்று வடிஞ்சு போச்சு…”

“ லேசா தலைவலி…தலைவலி எல்லாம் எப்பொய்மன்ட் எடுத்துக்கிட்டாடா வரும்…ஓக்கே நான் கிளம்புறேன்…”அர்ஜுன் கிளம்பிப் போய்விட்டான்.
ரிஷியிற்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

“மானிஷா பேரை சொன்னதும் அவன் ஏன் டென்ஷனாவுறான்…ரெண்டுபேருக்கும் ஏதாவது ஒரு வகைல தொடர்பு இருந்தாகவேண்டும்..”
இந்த முடிவில் மட்டும்  ரிஷி உறுதியாய் இருந்தான்…
                                                              தொடரும்.....


                                                                      நீயே என் சுவாசம் 03