Thursday, November 3, 2011

நீயே என் சுவாசம் 13


அத்தியாயம் 13

ஒரு நாள்…..

லேசான மயக்கம்… என்ன என்று புரிஞ்சிக்க முடியலை…
நான் தெளிவாக இருந்தாலும் பக்கத்துல நடக்குற சம்பவங்களை தெளிவா புரிஞ்சுக்கிற மனநிலை இருக்கலை…. 
ஒரு டொக்டரா இருந்துட்டும் அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை .ஒரு அசதி…
சோர்வுன்னு விட்டுவிட்டேன்….

சொத்துக்களை பரணிபேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவதற்குப் போக தயாராகச் சொன்னான்….
இந்த நிலமையில் எப்படின்னு மறுத்ததற்கு தங்கையை கொண்ணுடுவேனென்று 
மிரட்டத் தொடங்கினான்….பயத்துல நானும் சம்மதிச்சிட்டேன்…..

பிறகுதான் தெரிந்தது…சுய சிந்தனையை இழப்பதற்காகவே பரணி ஏதோ கலந்து தந்து என்னை அழைத்துச் சென்றிருப்பது ரெஜிஷ்டர் மேரேஜ்கு என்று….
அதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே….எனக்குத் தெரியாமல் இவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று வெளியில சொன்னா நம்புவாங்களா????ஃ
சிரிக்கத்தான் செய்வாங்க.

எவ்வளவுதான் படித்திருந்தாலும்…
.பக்குவப்பட்டிருந்தாலும் தனக்குன்னு ஒரு துன்பம் வர்ரப்போ….நிலைகுழைந்து போய்…தடுமாறுவது இயல்புதானே ரிஷி….

அதுலயும் அனாதரவா தனியா இருக்கிற ஒரு பொண்ணு நான்….
என் நிலைமையை உங்களால கற்கனைகூட பண்ண முடியாமலிருக்கும்….

படிப்படியாக பரணியின் சுயரூபம் மிருகத்தனமா வெளிப்பட்போது….அத்தனை துன்பத்தையும் தாங்கிக்கிட்டேன்…
 தங்கையை இன்றுவிடுவான் நாளைவிடுவான் என்று…அந்த நம்பிக்கையை பாழாக்கிட்டான் பரணி……
.அர்ஜீனை திட்டமிட்டுப் பழிவாங்கிய விதத்தை பரணி அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…..

அர்ஜீனின் குடும்பத்தை பாழாக்கியதற்கு மறைமுகமா எனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது….

அர்ஜுனை எப்படியாவது சமாதானப் படுத்தலாம்…எனக்கு நம்பிக்கை இருக்கு…..அர்ஜுனை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டியது என் பொறுப்பே….

 இந்த விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் ரிஷி…நான் திரும்பி வராத பட்சத்தில்…..
என் தங்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எனக்காக ஏற்றுக் கொள்வீர்களானால் மிக்க சந்தோசமே….
அவளை அவளது விருப்பத்துக்குறியவரிடத்தில் சேர்த்துவிடுங்கள்…..

ரிஷி….நான் அறிந்து எங்கப்பா அம்மா மனசாலகூட தப்பு பண்ணிணதில்லை….

 யார் சாபம் எங்களை இப்படி துரத்து துரத்தென்று துரத்துது….

கடவுள் போடுற முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தால் நான் ஏன் இப்படிப் புலம்புவேன்….
 நீங்கள் என் கூட இருக்கும்போது இனி பயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் ரிஷி….
உங்களை நம்பித்தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்….என்னை வெறுப்பீர்களா ரிஷி

கண்ணீருடன்…..
மானிஷா…

வரிகள் ரிஷியை வெகுவாகப் பாதித்திருந்தது….

இதயப் படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை…..
மனதுக்குள் இவ்வளவு கவலையைவைத்துக் கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள் மானிஷா…அவளுக்கொரு அழகான வாழ்வைக் கொடுக்க வழியில்லாமல் போய்விட்டதே…..
என்ன கொடுமையிது…….வேதனையின் விளிம்பில் தள்ளாடினான்……

என்ன மானிஷா…
உன்னப்போய் நான் தப்பா நினைப்பேனா???
? நீ இன்னிக்கு இருந்திருந்தால் நீ வாழப்போற வாழ்க்கையே வேற….என்ன பன்றது…என்னை கையாளாகாதவனா கைசதப்பட வைத்துவிட்டதே காலம் ….

தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…. 
விரக்தி அவனை வெகுவாய் வாட்டியது…..
கடிதத்தை மடித்து மேசைமீது வைத்தான்…
.ஸோபாவில் சாய்ந்து கண்களை இருக மூடிக்கொண்டான்….

நிமமதியாகத் தூங்கமுடியவில்லை

வாகனத்தின் ஹோன் இடைவிடாது அடித்தது….

அலுத்துக்கொண்டான் ரிஷி….

“யாரது….இந்த நேரத்தில்…“.முணுமுனுத்தபடியே போய் முன் கதவை அகலத்திறந்தான்….

கோல் டெக்ஸி….

ரிஷியின் முகத்தில் சந்தேக ரேகைகள்….

“யாராக இருக்கும்….“

யோசிக்குற ரிஷியின்  மூளைக்கு அதிக வேலை கொடுக்க முன்பே ....வண்டியின் பின்னாடி இருந்த கண்ணாடி படிப்படியாக கீழிறங்கியது….
.
“மாணிஷா” தன்னையறியாமலேயே ஆச்சர்யத்தில் அலரிவிட்டான்….

அன்றலர்ந்த தாமரையாய்…

அதே முகம்….

அதே பார்வை…

அதே சிரிப்பு….

“இன்னுமா உயிரோட இருக்கே…..நான் காண்பது கணவா…..“ 

தன்னையே கிள்ளிப்பார்த்து சுயநினைவுக்கு மீண்டான்……..வண்டியை நோக்கி விரைந்தான்….ரிஷி….

 தொடரும்.....



அத்தியாயம் 13

ஒரு நாள்…..

லேசான மயக்கம்… என்ன என்று புரிஞ்சிக்க முடியலை…
நான் தெளிவாக இருந்தாலும் பக்கத்துல நடக்குற சம்பவங்களை தெளிவா புரிஞ்சுக்கிற மனநிலை இருக்கலை…. 
ஒரு டொக்டரா இருந்துட்டும் அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை .ஒரு அசதி…
சோர்வுன்னு விட்டுவிட்டேன்….

சொத்துக்களை பரணிபேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவதற்குப் போக தயாராகச் சொன்னான்….
இந்த நிலமையில் எப்படின்னு மறுத்ததற்கு தங்கையை கொண்ணுடுவேனென்று 
மிரட்டத் தொடங்கினான்….பயத்துல நானும் சம்மதிச்சிட்டேன்…..

பிறகுதான் தெரிந்தது…சுய சிந்தனையை இழப்பதற்காகவே பரணி ஏதோ கலந்து தந்து என்னை அழைத்துச் சென்றிருப்பது ரெஜிஷ்டர் மேரேஜ்கு என்று….
அதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே….எனக்குத் தெரியாமல் இவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று வெளியில சொன்னா நம்புவாங்களா????ஃ
சிரிக்கத்தான் செய்வாங்க.

எவ்வளவுதான் படித்திருந்தாலும்…
.பக்குவப்பட்டிருந்தாலும் தனக்குன்னு ஒரு துன்பம் வர்ரப்போ….நிலைகுழைந்து போய்…தடுமாறுவது இயல்புதானே ரிஷி….

அதுலயும் அனாதரவா தனியா இருக்கிற ஒரு பொண்ணு நான்….
என் நிலைமையை உங்களால கற்கனைகூட பண்ண முடியாமலிருக்கும்….

படிப்படியாக பரணியின் சுயரூபம் மிருகத்தனமா வெளிப்பட்போது….அத்தனை துன்பத்தையும் தாங்கிக்கிட்டேன்…
 தங்கையை இன்றுவிடுவான் நாளைவிடுவான் என்று…அந்த நம்பிக்கையை பாழாக்கிட்டான் பரணி……
.அர்ஜீனை திட்டமிட்டுப் பழிவாங்கிய விதத்தை பரணி அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…..

அர்ஜீனின் குடும்பத்தை பாழாக்கியதற்கு மறைமுகமா எனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது….

அர்ஜுனை எப்படியாவது சமாதானப் படுத்தலாம்…எனக்கு நம்பிக்கை இருக்கு…..அர்ஜுனை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டியது என் பொறுப்பே….

 இந்த விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் ரிஷி…நான் திரும்பி வராத பட்சத்தில்…..
என் தங்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எனக்காக ஏற்றுக் கொள்வீர்களானால் மிக்க சந்தோசமே….
அவளை அவளது விருப்பத்துக்குறியவரிடத்தில் சேர்த்துவிடுங்கள்…..

ரிஷி….நான் அறிந்து எங்கப்பா அம்மா மனசாலகூட தப்பு பண்ணிணதில்லை….

 யார் சாபம் எங்களை இப்படி துரத்து துரத்தென்று துரத்துது….

கடவுள் போடுற முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தால் நான் ஏன் இப்படிப் புலம்புவேன்….
 நீங்கள் என் கூட இருக்கும்போது இனி பயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் ரிஷி….
உங்களை நம்பித்தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்….என்னை வெறுப்பீர்களா ரிஷி

கண்ணீருடன்…..
மானிஷா…

வரிகள் ரிஷியை வெகுவாகப் பாதித்திருந்தது….

இதயப் படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை…..
மனதுக்குள் இவ்வளவு கவலையைவைத்துக் கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள் மானிஷா…அவளுக்கொரு அழகான வாழ்வைக் கொடுக்க வழியில்லாமல் போய்விட்டதே…..
என்ன கொடுமையிது…….வேதனையின் விளிம்பில் தள்ளாடினான்……

என்ன மானிஷா…
உன்னப்போய் நான் தப்பா நினைப்பேனா???
? நீ இன்னிக்கு இருந்திருந்தால் நீ வாழப்போற வாழ்க்கையே வேற….என்ன பன்றது…என்னை கையாளாகாதவனா கைசதப்பட வைத்துவிட்டதே காலம் ….

தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…. 
விரக்தி அவனை வெகுவாய் வாட்டியது…..
கடிதத்தை மடித்து மேசைமீது வைத்தான்…
.ஸோபாவில் சாய்ந்து கண்களை இருக மூடிக்கொண்டான்….

நிமமதியாகத் தூங்கமுடியவில்லை

வாகனத்தின் ஹோன் இடைவிடாது அடித்தது….

அலுத்துக்கொண்டான் ரிஷி….

“யாரது….இந்த நேரத்தில்…“.முணுமுனுத்தபடியே போய் முன் கதவை அகலத்திறந்தான்….

கோல் டெக்ஸி….

ரிஷியின் முகத்தில் சந்தேக ரேகைகள்….

“யாராக இருக்கும்….“

யோசிக்குற ரிஷியின்  மூளைக்கு அதிக வேலை கொடுக்க முன்பே ....வண்டியின் பின்னாடி இருந்த கண்ணாடி படிப்படியாக கீழிறங்கியது….
.
“மாணிஷா” தன்னையறியாமலேயே ஆச்சர்யத்தில் அலரிவிட்டான்….

அன்றலர்ந்த தாமரையாய்…

அதே முகம்….

அதே பார்வை…

அதே சிரிப்பு….

“இன்னுமா உயிரோட இருக்கே…..நான் காண்பது கணவா…..“ 

தன்னையே கிள்ளிப்பார்த்து சுயநினைவுக்கு மீண்டான்……..வண்டியை நோக்கி விரைந்தான்….ரிஷி….

 தொடரும்.....


Monday, October 31, 2011

நீயே என் சுவாசம் 12



அத்தியாயம் 12

ஒருவாரகால அலைச்சல் ரிஷியிற்கு……
சோகம் வேறு…. முகத்தில் அப்பிக் கிடந்தது….
வழிக்கப்படாத தாடி முகத்தில் ஆங்காங்கே….முற்களாய்…….அரும்பிக் கிடந்தது….
எந்தவகையிலும் மானிஷாவின் இழப்பை ரிஷியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….
….கொலைகாரனைப்பற்றிய தடயங்கள் இன்னும்…கிடைக்காதது..ரிஷியிற்கு பலத்த ஏமாற்றமே….

தனது வண்டியை சேர்விஸ் இற்கு விட்டு… எடுத்து வரும்போது

“ ஸேர்….உங்க வண்டியுள் இந்த ஹேன்ட் பேக்….இருந்திச்சு…”

 ரிஷியின் கைகளில் நம்பிக்கைக்குறிய அந்த பணியாள்…திணிக்கும் போது….அதிர்ந்து போனான் ரிஷி….
அது மானிஷாவின் கைப்பை…
.வீடுவந்து அதைப் பிரிக்கும்வரை இருப்புக்கொள்ளவில்லை….
வீட்டுக்கு வந்ததும் கைப்பையை எடுத்து கட்டிலில் வைத்தான்….மானிஷாவே அமர்ந்திருப்பதாய்…. ஒரு பிரம்மை….
மனது ரணமாவதை உணர்ந்தான்….அவள் இல்லாமல் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே என்று நொந்து கொண்டான்..

மென்மையாய் கைப்பையை தொட்டவனது மேனி சிலிர்த்தது…ஒரு கனம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்…திறந்ததுமே ஒரு கனத்த கடிதம் கண்களை உருத்திற்று….


அவசரமாய்ப்பிரித்துப் படித்தான்.

ரிஷி இந்தக்கடிதம் உங்கள் கைகளை வந்தடைகிற நேரம் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமென்று என்னால் கற்கனைகூட பண்ண முடியலை….

ஆனால்  

நான் உயிரோடிருப்பேனா என்கிறது கேள்விக்குறிதான்…..
உங்ளை இதுவரை நான் புரிந்துகொள்ளவில்லையென்று தப்புக்கணக்குப் போடவேண்டாம்…
.எனது வாழ்க்கையை உங்களைத்தவிற வேறுயாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை…..

அப்படி என்னை ஒப்படைக்குற தருணம்….என்னைச்சுற்றிய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதனாலதான் இத்துனை தாமதமும்…குழப்பமும்....
.
இந்த உலகம் ஏன் இன்னும் கெட்டவர்களை உற்பத்திசெய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை….
அனாதரவாவிடப்பட்ற எங்களைப் போன்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அதன் வலியும் கொடுமையும் புரியும்படியான தர்மசங்கடத்தையும் நிர்ப்பந்தத்தையும் கொடுக்கிறது…..

சொல்லுங்கள் ரிஷி…..ஏன்…

கொஞ்சம் சொத்துப்பத்துள்ள ஒருவருக்கு பிள்ளையாய் பொறந்தது தப்பு என்கிறீர்களா??? 

நாங்க பருவவயதை அடையுமுன் பெத்தவங்க எங்களைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் போனதுதான்  தவறு என்கிறீங்களா????

அதுக்கப்புறம் எங்களுக்கு எல்லாமே எங்க தாய்மாமன்தான்….தங்கமானவரு…..அவரு புள்ள பரணியும்  அவரைப்போலவே ……
அதனால என் தங்கச்சியை பரணிக்கு கட்டிக் கொடுக்குறதா நான் வாக்குக் கொடுத்துட்டேன்….வெளி நாட்டுல இருக்கிற பரணியை வரவழைச்சு என் தங்கச்சியின் கல்யாண ஏற்பாட்டைத் துவங்கினபோதுதான் எனக்குத் தெரிய வந்திச்சு 
அவள் அர்ஜுன் என்கிற ஒருவனை காதலிப்பதாக…..

வீட்டுக்குள் வளர்ந்தவள் நான்…தங்கை…படிப்பு …ஹொஸ்டல்.. என்று என் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் நான்…

பரணியிடம் அர்ஜுன் பற்றி விசாரிக்கச் சொன்னேன்….

வந்து சொன்ன தகவல் நல்லதாகவே இல்லை…..அர்ஜுனின் தொழில்…நடத்தைகளை
ஆதாரபூர்வமாக பரணி நிரூபித்தபின் …பாசத்தைக் கொட்டிய என் தங்கையைக் எப்படி கட்டிக் கொடுப்பேன்…..

அவளின் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன் பலனில்லை….

அவளின் மனசு மாறும்வரை தூரத்து சொந்தமான அத்தையொருவரின் வீட்டில்  சிலநாள் வைத்திருக்க முடிவெடுத்து அனுப்பிவைத்தோம்….
 அதுதான் நான் செய்த முதல் தப்பு….

தங்கமானவருக்குப்போய் எப்படி ஒரு அசிங்கம் பிறந்தது….நம்பமுடியலை ரிசி…

 பரணி…ஒட்டுமொத்த தப்புகளின் இருப்பிடம்…
.எங்க சொத்துக்களையும் சந்தோசங்களையும் கொஞ்சம் கொஞ்சம் கரைக்க வந்த எமன்தான் அவன் என்று எனக்கு புரிய காலம் தேவைப்பட்டது…

இதற்குமேல் ரிஷியிற்கு கடிதத்தைப் பொறுமையாக வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை…..
அவசர அவசரமாய் வாசித்தான்….

முக்கிய குறிப்புகளைப் பொறுக்கி உடனே இன்ஷ்பெக்டர் பாலாஜயிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ரிஷி……

இரண்டு நாட்கள் சுத்த சூன்யமாய் நகர்ந்தது…..

கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வர….
எத்தனைமுறைதான் படிப்பது….

ஆனாலும்

மீண்டும் கண்களைப் பதித்தான் கடிதத்தில்……

மாமாவுக்கு பெரியளவுல வசதிகள் இல்லை. 
தோளுக்குமேல வளர்ந்த புள்ளய கண்டிச்சு வளர்க்கத் தெரியலை அவர்க்கு….பரணிபத்தின ஏக்கத்துலயே கண்ணை மூடிட்டாரு….
.என்கிறவிசயம் பிறகுதான் எனக்குப் புரிந்தது…ரிஷி

காலம் தாழ்ந்து புரிந்து என்ன பயன்…

என் தங்கையை தங்கவைத்த இடம் இன்றுவரை தெரியவில்லை எனக்கு……
தங்கையை விடுவிக்கனுமென்றால் முழு சொத்தையும் பரணிபேர்ல எழுதித்தரனுமுன்னு சொன்னதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தேன்….
 
ஒரு நாள்…..

                                                  தொடரும்....


அத்தியாயம் 12

ஒருவாரகால அலைச்சல் ரிஷியிற்கு……
சோகம் வேறு…. முகத்தில் அப்பிக் கிடந்தது….
வழிக்கப்படாத தாடி முகத்தில் ஆங்காங்கே….முற்களாய்…….அரும்பிக் கிடந்தது….
எந்தவகையிலும் மானிஷாவின் இழப்பை ரிஷியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….
….கொலைகாரனைப்பற்றிய தடயங்கள் இன்னும்…கிடைக்காதது..ரிஷியிற்கு பலத்த ஏமாற்றமே….

தனது வண்டியை சேர்விஸ் இற்கு விட்டு… எடுத்து வரும்போது

“ ஸேர்….உங்க வண்டியுள் இந்த ஹேன்ட் பேக்….இருந்திச்சு…”

 ரிஷியின் கைகளில் நம்பிக்கைக்குறிய அந்த பணியாள்…திணிக்கும் போது….அதிர்ந்து போனான் ரிஷி….
அது மானிஷாவின் கைப்பை…
.வீடுவந்து அதைப் பிரிக்கும்வரை இருப்புக்கொள்ளவில்லை….
வீட்டுக்கு வந்ததும் கைப்பையை எடுத்து கட்டிலில் வைத்தான்….மானிஷாவே அமர்ந்திருப்பதாய்…. ஒரு பிரம்மை….
மனது ரணமாவதை உணர்ந்தான்….அவள் இல்லாமல் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே என்று நொந்து கொண்டான்..

மென்மையாய் கைப்பையை தொட்டவனது மேனி சிலிர்த்தது…ஒரு கனம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்…திறந்ததுமே ஒரு கனத்த கடிதம் கண்களை உருத்திற்று….


அவசரமாய்ப்பிரித்துப் படித்தான்.

ரிஷி இந்தக்கடிதம் உங்கள் கைகளை வந்தடைகிற நேரம் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமென்று என்னால் கற்கனைகூட பண்ண முடியலை….

ஆனால்  

நான் உயிரோடிருப்பேனா என்கிறது கேள்விக்குறிதான்…..
உங்ளை இதுவரை நான் புரிந்துகொள்ளவில்லையென்று தப்புக்கணக்குப் போடவேண்டாம்…
.எனது வாழ்க்கையை உங்களைத்தவிற வேறுயாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை…..

அப்படி என்னை ஒப்படைக்குற தருணம்….என்னைச்சுற்றிய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதனாலதான் இத்துனை தாமதமும்…குழப்பமும்....
.
இந்த உலகம் ஏன் இன்னும் கெட்டவர்களை உற்பத்திசெய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை….
அனாதரவாவிடப்பட்ற எங்களைப் போன்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அதன் வலியும் கொடுமையும் புரியும்படியான தர்மசங்கடத்தையும் நிர்ப்பந்தத்தையும் கொடுக்கிறது…..

சொல்லுங்கள் ரிஷி…..ஏன்…

கொஞ்சம் சொத்துப்பத்துள்ள ஒருவருக்கு பிள்ளையாய் பொறந்தது தப்பு என்கிறீர்களா??? 

நாங்க பருவவயதை அடையுமுன் பெத்தவங்க எங்களைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் போனதுதான்  தவறு என்கிறீங்களா????

அதுக்கப்புறம் எங்களுக்கு எல்லாமே எங்க தாய்மாமன்தான்….தங்கமானவரு…..அவரு புள்ள பரணியும்  அவரைப்போலவே ……
அதனால என் தங்கச்சியை பரணிக்கு கட்டிக் கொடுக்குறதா நான் வாக்குக் கொடுத்துட்டேன்….வெளி நாட்டுல இருக்கிற பரணியை வரவழைச்சு என் தங்கச்சியின் கல்யாண ஏற்பாட்டைத் துவங்கினபோதுதான் எனக்குத் தெரிய வந்திச்சு 
அவள் அர்ஜுன் என்கிற ஒருவனை காதலிப்பதாக…..

வீட்டுக்குள் வளர்ந்தவள் நான்…தங்கை…படிப்பு …ஹொஸ்டல்.. என்று என் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் நான்…

பரணியிடம் அர்ஜுன் பற்றி விசாரிக்கச் சொன்னேன்….

வந்து சொன்ன தகவல் நல்லதாகவே இல்லை…..அர்ஜுனின் தொழில்…நடத்தைகளை
ஆதாரபூர்வமாக பரணி நிரூபித்தபின் …பாசத்தைக் கொட்டிய என் தங்கையைக் எப்படி கட்டிக் கொடுப்பேன்…..

அவளின் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன் பலனில்லை….

அவளின் மனசு மாறும்வரை தூரத்து சொந்தமான அத்தையொருவரின் வீட்டில்  சிலநாள் வைத்திருக்க முடிவெடுத்து அனுப்பிவைத்தோம்….
 அதுதான் நான் செய்த முதல் தப்பு….

தங்கமானவருக்குப்போய் எப்படி ஒரு அசிங்கம் பிறந்தது….நம்பமுடியலை ரிசி…

 பரணி…ஒட்டுமொத்த தப்புகளின் இருப்பிடம்…
.எங்க சொத்துக்களையும் சந்தோசங்களையும் கொஞ்சம் கொஞ்சம் கரைக்க வந்த எமன்தான் அவன் என்று எனக்கு புரிய காலம் தேவைப்பட்டது…

இதற்குமேல் ரிஷியிற்கு கடிதத்தைப் பொறுமையாக வாசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை…..
அவசர அவசரமாய் வாசித்தான்….

முக்கிய குறிப்புகளைப் பொறுக்கி உடனே இன்ஷ்பெக்டர் பாலாஜயிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ரிஷி……

இரண்டு நாட்கள் சுத்த சூன்யமாய் நகர்ந்தது…..

கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வர….
எத்தனைமுறைதான் படிப்பது….

ஆனாலும்

மீண்டும் கண்களைப் பதித்தான் கடிதத்தில்……

மாமாவுக்கு பெரியளவுல வசதிகள் இல்லை. 
தோளுக்குமேல வளர்ந்த புள்ளய கண்டிச்சு வளர்க்கத் தெரியலை அவர்க்கு….பரணிபத்தின ஏக்கத்துலயே கண்ணை மூடிட்டாரு….
.என்கிறவிசயம் பிறகுதான் எனக்குப் புரிந்தது…ரிஷி

காலம் தாழ்ந்து புரிந்து என்ன பயன்…

என் தங்கையை தங்கவைத்த இடம் இன்றுவரை தெரியவில்லை எனக்கு……
தங்கையை விடுவிக்கனுமென்றால் முழு சொத்தையும் பரணிபேர்ல எழுதித்தரனுமுன்னு சொன்னதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தேன்….
 
ஒரு நாள்…..

                                                  தொடரும்....