Thursday, October 6, 2011

நீயே என் சுவாசம் 06


அத்தியாயம் 06

“ என்னடா ரிஷி….இப்படி சீக்கிரமா மீட் பண்ண என்னடா காரணம்….வொய்ஸ் மெயிலைப் பார்த்ததும் அலரி அடிச்சிட்டு ஓடி வந்தேன்…நீ என்னடான்னா…கூலா உக்காந்திட்டு இருக்கே…என்னடா மேட்டர்…”

தோள்களை தட்டியபடியே வந்தமர்ந்தான் அர்ஜுன்
ரிஷி மௌனமாய் கண்களாலேயே… அவனை அளந்தான்….சிறிது நேர மௌனம்…ரிஷியே அந்த மௌனத்தை உடைத்தான்….

“ டேய்….மானிஷா நல்லவளா…கெட்டவளான்னு எனக்குத் தெரியலை..எனக்கு அவளை புடிச்சிருக்கு…அவள் எப்படிப்பட்டவளா அருந்தாலும் எனக்கு ஓக்கே….அவள் இல்லாம நா இல்லைடா….”

“ இப்போ இதை ஏன் என்கிட்ட சொல்றே….”

“நீ என் உயிர் நண்பன்டா….உன்கிட்ட சொல்லாம….எங்க சீஃப் டொக்டர் கிட்வாடா சொல்லச் சொல்லுறே….”

“ அப்போ நான் சொன்னா கேட்பியா…மானிஷாக்கு கல்யாணம் ஆயிடுச்சி…”

“ என்னடா விளையாடுறியா….இப்படி பொட்டுன்னு ஒடச்சிட்டா நான் நம்பிடுவேனா…ஆமா…உனக்கு என்னடா ஆச்சு….ஏன்டா இப்படி சிடு சிடுன்னு இருக்கே…”

ரிஷி கூறவும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.

“ சரிடா…இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே…சொல்லு….பொறுமையா கேட்க நான் தயார்….”

கூறிய ரிஷி அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்தான்….இருண்டு கருத்திருந்தது….அவனே சொல்லும் வரை ரிஷி தன் மனக்குமுறலை அடக்கியே வாசித்தான்….

“ ம்…சொல்லு அர்ஜுன்…”

“ டேய் ….வேணாம்டா…விட்டுடு….அவள் நல்லவள் இல்லை…அவள் சூழ்ச்சிக்காரி….நம்பவெச்சி ஏமாத்திடுவாடா….”

ரிஷியிற்கு அதிர்ச்யை தாங்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டான்.

“ நீ எதை வெச்சி இப்படி அவளை எடை போடுறே….நீ சொல்றதை நான் எப்படிடா நம்புறது…”

ரிஷியின் கேள்வியிற்கு அர்ஜுனின் விடை மௌனமே…

“ டேய்…என்னடா ஸைலன்ட்….சொல்லுடா…”

பதற்றத்தை வார்த்தையில் சுமத்தவில்லை ரிஷி.

“ ஸோரிடா….இதெல்லாம் சொல்லி….என் கடந்தகால வாழ்க்கையை கிளரிப்பார்க்க முடியலைடா…வலிக்குதுடா….”

 என்றான் கண்கள் குளமாக
தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டான் ரிஷி….அர்ஜுன் தெடர்ந்தான்

“ உன் நண்பன் நான் சொல்றேன்….என்னை நீ நம்பு….என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு காரணம் அவளேதான்…வாழ்க்கையை இழந்து…காதலை இழந்து…குடும்பத்தை இழந்து நிக்கிறேன் என்றால் காரணம் மானிஷாதான்… அவளை பழிவாங்கத் துடிக்குதுடா மனசு….”

ரிஷி அழைப்பதையோ…தடுப்பதையோ…காதில் வாங்கும் மனநிலையில் இல்லைாமல்…
தனது ஆதங்கத்தையும்…ஆவேசத்தையும்….கொட்டிக்கொண்டிருந்திருந்தான் அர்ஜுன்…
விக்கித்துப்போய் நின்றான் ரிஷி……

                                                     தொடரும்....
                                          நீயே என் சுவாசம் 07
                                            

அத்தியாயம் 06

“ என்னடா ரிஷி….இப்படி சீக்கிரமா மீட் பண்ண என்னடா காரணம்….வொய்ஸ் மெயிலைப் பார்த்ததும் அலரி அடிச்சிட்டு ஓடி வந்தேன்…நீ என்னடான்னா…கூலா உக்காந்திட்டு இருக்கே…என்னடா மேட்டர்…”

தோள்களை தட்டியபடியே வந்தமர்ந்தான் அர்ஜுன்
ரிஷி மௌனமாய் கண்களாலேயே… அவனை அளந்தான்….சிறிது நேர மௌனம்…ரிஷியே அந்த மௌனத்தை உடைத்தான்….

“ டேய்….மானிஷா நல்லவளா…கெட்டவளான்னு எனக்குத் தெரியலை..எனக்கு அவளை புடிச்சிருக்கு…அவள் எப்படிப்பட்டவளா அருந்தாலும் எனக்கு ஓக்கே….அவள் இல்லாம நா இல்லைடா….”

“ இப்போ இதை ஏன் என்கிட்ட சொல்றே….”

“நீ என் உயிர் நண்பன்டா….உன்கிட்ட சொல்லாம….எங்க சீஃப் டொக்டர் கிட்வாடா சொல்லச் சொல்லுறே….”

“ அப்போ நான் சொன்னா கேட்பியா…மானிஷாக்கு கல்யாணம் ஆயிடுச்சி…”

“ என்னடா விளையாடுறியா….இப்படி பொட்டுன்னு ஒடச்சிட்டா நான் நம்பிடுவேனா…ஆமா…உனக்கு என்னடா ஆச்சு….ஏன்டா இப்படி சிடு சிடுன்னு இருக்கே…”

ரிஷி கூறவும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.

“ சரிடா…இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே…சொல்லு….பொறுமையா கேட்க நான் தயார்….”

கூறிய ரிஷி அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்தான்….இருண்டு கருத்திருந்தது….அவனே சொல்லும் வரை ரிஷி தன் மனக்குமுறலை அடக்கியே வாசித்தான்….

“ ம்…சொல்லு அர்ஜுன்…”

“ டேய் ….வேணாம்டா…விட்டுடு….அவள் நல்லவள் இல்லை…அவள் சூழ்ச்சிக்காரி….நம்பவெச்சி ஏமாத்திடுவாடா….”

ரிஷியிற்கு அதிர்ச்யை தாங்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டான்.

“ நீ எதை வெச்சி இப்படி அவளை எடை போடுறே….நீ சொல்றதை நான் எப்படிடா நம்புறது…”

ரிஷியின் கேள்வியிற்கு அர்ஜுனின் விடை மௌனமே…

“ டேய்…என்னடா ஸைலன்ட்….சொல்லுடா…”

பதற்றத்தை வார்த்தையில் சுமத்தவில்லை ரிஷி.

“ ஸோரிடா….இதெல்லாம் சொல்லி….என் கடந்தகால வாழ்க்கையை கிளரிப்பார்க்க முடியலைடா…வலிக்குதுடா….”

 என்றான் கண்கள் குளமாக
தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டான் ரிஷி….அர்ஜுன் தெடர்ந்தான்

“ உன் நண்பன் நான் சொல்றேன்….என்னை நீ நம்பு….என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு காரணம் அவளேதான்…வாழ்க்கையை இழந்து…காதலை இழந்து…குடும்பத்தை இழந்து நிக்கிறேன் என்றால் காரணம் மானிஷாதான்… அவளை பழிவாங்கத் துடிக்குதுடா மனசு….”

ரிஷி அழைப்பதையோ…தடுப்பதையோ…காதில் வாங்கும் மனநிலையில் இல்லைாமல்…
தனது ஆதங்கத்தையும்…ஆவேசத்தையும்….கொட்டிக்கொண்டிருந்திருந்தான் அர்ஜுன்…
விக்கித்துப்போய் நின்றான் ரிஷி……

                                                     தொடரும்....
                                          நீயே என் சுவாசம் 07
                                            

Wednesday, October 5, 2011

Tuesday, October 4, 2011

நீயே என் சுவாசம் 05

அத்தியாயம் 05

மானிஷா மதியமே வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்….

ரிஷிவேறு மருத்துவமனையில் இல்லை என்பது 
மானிஷாவின் மனதை காயப்படுத்தி ஏமாற்றத்தையே கொடுத்தது…

…சில சம்பவங்களிலிருந்து அவளால் இன்றுவரை
 மீள முடியாமலும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமலும்
 தவித்தவளுக்கு… 
ரிஷி அவளது மனதை வெகுவாகக் கவர்ந்த போதும்
…ரிஷியிற்கு தான் தகுதியற்றவள் என்றே உள் மனது கூவிக்கொண்டிருந்தது….
அந்த மன உழைச்சலிலிருந்து 
தன்னை விடுவித்துக்கொள்ள பெரிதும் போராட வேண்டியதாயிற்று…..

அழுப்போடு வந்த மானிஷா
தன் மாற்று சாவியை எடுத்து கதவை திறந்தாள்.கதவை தாளிட்டு முன் கூடத்துக்கு வந்தாள்….அங்கே…..

பரணியை தொற்றிக் கொண்டிருந்தாள் மிடியுடன் வந்த மொடன்……ஒருத்தி

“ சீ ” 

என்றவள் அதிர்ச்சியடையவில்லை…
அறுவருத்து முகத்தை திருப்பிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
கதவை மூடிவிட்டு கைப்பையை மேசைமீது வைத்தவள்
 கட்டிலில் வீழ்ந்து தலையணையை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்….

இது அங்கு நடக்கும் தொடர்கதைதான்….என்ன…
அத்தனை நாளும் அந்தக்கலியாட்டம் இரவில் நடந்தது
…இன்று பகலிலேயே ஆரம்பமாகியிருந்தது…அவ்வளவுதான்….

பரணியின் அணைப்பிலிருந்த அந்த மொடன் அவனது கேசங்களை வருடியபடியே….

“ யாரு டாலிங் அது….மேனஸே இல்லாம….” போதை ஏற்றும் குரலில் சிணுங்க

“ என்..மாமா பொண்ணு….அழகின்னு நெனப்பு…அவ கெடக்குறா..விடும்மா…”

அவர்களின் கொஞ்சுதலும் குழாவுதலும்…சுவர்களையும் தாண்டி மானிஷாவின் காது மடலைக் கடித்துக் காயப்படுத்தின…...

“ மாமா பொண்ணுதான்டா….
மாமா பொண்ணுங்கள நடத்துறவிதமாடா எங்களை நடத்துறே
…அயோகக்கயனா மாறி எங்க வாழ்க்கைல பூந்து கெடுத்து
 குட்டிச்சுவராக்கிட்டியே பாவி….உனக்கு நல்ல சாவு வரவே வராதுடா…….”

ஆத்திரம் தீர அழுது தீர்த்தாள்…
தன் தங்கைக்காய் அத்தனை அவமானங்களையும் தாங்கி நொந்துபோனாள்
கண்ணீரை துடைத்து சாபத்தை தூவினாள்….

ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து பேனா காகிதம் சகிதம் வந்தமர்ந்தாள்.
ரிஷியிடம் அத்தனை உண்மைகளையும் சொல்லிவிடுவதென்று…
காகிதத்தில் …நடந்தவற்றை கிறுக்கித்தள்ளினாள்…

முடிந்தாள் தன்னைக் காப்பாற்றி…

மனைவியாய் ஏற்கும் படி அன்புக்கட்டளை 
இட்டு கடிதத்தை நிறைவு செய்து
 கையொப்பமிட்டு மடித்து கைப்பைக்குள் பத்திரப்படுத்தினாள்….

என்னதான் மனதின் பாரத்தை கடிதத்தில் 
கொட்டித் திணித்தாலும்…பெண்மையின் மனது சும்மா இருக்கவிடவில்லை.

யதார்த்தங்களின் பிடியில் இதெல்லாம்
 சாத்தியமாகுமா இல்லையா என்கிற தேடலில்
 தன் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருந்தாள் மானிஷா
…அன்று முழுதும் அறைக்குள்ளேயே  அழுது…அடைபட்டிருந்தாள்….


                                          தொடரும்....
                                           நீயே என் சுவாசம் 06
அத்தியாயம் 05

மானிஷா மதியமே வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்….

ரிஷிவேறு மருத்துவமனையில் இல்லை என்பது 
மானிஷாவின் மனதை காயப்படுத்தி ஏமாற்றத்தையே கொடுத்தது…

…சில சம்பவங்களிலிருந்து அவளால் இன்றுவரை
 மீள முடியாமலும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமலும்
 தவித்தவளுக்கு… 
ரிஷி அவளது மனதை வெகுவாகக் கவர்ந்த போதும்
…ரிஷியிற்கு தான் தகுதியற்றவள் என்றே உள் மனது கூவிக்கொண்டிருந்தது….
அந்த மன உழைச்சலிலிருந்து 
தன்னை விடுவித்துக்கொள்ள பெரிதும் போராட வேண்டியதாயிற்று…..

அழுப்போடு வந்த மானிஷா
தன் மாற்று சாவியை எடுத்து கதவை திறந்தாள்.கதவை தாளிட்டு முன் கூடத்துக்கு வந்தாள்….அங்கே…..

பரணியை தொற்றிக் கொண்டிருந்தாள் மிடியுடன் வந்த மொடன்……ஒருத்தி

“ சீ ” 

என்றவள் அதிர்ச்சியடையவில்லை…
அறுவருத்து முகத்தை திருப்பிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
கதவை மூடிவிட்டு கைப்பையை மேசைமீது வைத்தவள்
 கட்டிலில் வீழ்ந்து தலையணையை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்….

இது அங்கு நடக்கும் தொடர்கதைதான்….என்ன…
அத்தனை நாளும் அந்தக்கலியாட்டம் இரவில் நடந்தது
…இன்று பகலிலேயே ஆரம்பமாகியிருந்தது…அவ்வளவுதான்….

பரணியின் அணைப்பிலிருந்த அந்த மொடன் அவனது கேசங்களை வருடியபடியே….

“ யாரு டாலிங் அது….மேனஸே இல்லாம….” போதை ஏற்றும் குரலில் சிணுங்க

“ என்..மாமா பொண்ணு….அழகின்னு நெனப்பு…அவ கெடக்குறா..விடும்மா…”

அவர்களின் கொஞ்சுதலும் குழாவுதலும்…சுவர்களையும் தாண்டி மானிஷாவின் காது மடலைக் கடித்துக் காயப்படுத்தின…...

“ மாமா பொண்ணுதான்டா….
மாமா பொண்ணுங்கள நடத்துறவிதமாடா எங்களை நடத்துறே
…அயோகக்கயனா மாறி எங்க வாழ்க்கைல பூந்து கெடுத்து
 குட்டிச்சுவராக்கிட்டியே பாவி….உனக்கு நல்ல சாவு வரவே வராதுடா…….”

ஆத்திரம் தீர அழுது தீர்த்தாள்…
தன் தங்கைக்காய் அத்தனை அவமானங்களையும் தாங்கி நொந்துபோனாள்
கண்ணீரை துடைத்து சாபத்தை தூவினாள்….

ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து பேனா காகிதம் சகிதம் வந்தமர்ந்தாள்.
ரிஷியிடம் அத்தனை உண்மைகளையும் சொல்லிவிடுவதென்று…
காகிதத்தில் …நடந்தவற்றை கிறுக்கித்தள்ளினாள்…

முடிந்தாள் தன்னைக் காப்பாற்றி…

மனைவியாய் ஏற்கும் படி அன்புக்கட்டளை 
இட்டு கடிதத்தை நிறைவு செய்து
 கையொப்பமிட்டு மடித்து கைப்பைக்குள் பத்திரப்படுத்தினாள்….

என்னதான் மனதின் பாரத்தை கடிதத்தில் 
கொட்டித் திணித்தாலும்…பெண்மையின் மனது சும்மா இருக்கவிடவில்லை.

யதார்த்தங்களின் பிடியில் இதெல்லாம்
 சாத்தியமாகுமா இல்லையா என்கிற தேடலில்
 தன் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருந்தாள் மானிஷா
…அன்று முழுதும் அறைக்குள்ளேயே  அழுது…அடைபட்டிருந்தாள்….


                                          தொடரும்....
                                           நீயே என் சுவாசம் 06

Monday, October 3, 2011

இப்படிக்கு….





நிறைவேறாத ஆசைகளின்
நிழல்களோ…
கடந்தகால ஜீவன்விட்ட
தூதோ….

அழியாது தேங்கிக்கிடக்கும்
இன்ப ஊற்றோ…
ஆசைகள் அடங்கா ஆன்மாவின்
ஆறுதல்தானோ….

பூ மொட்டுகளில் மேயும்
சில் வண்டுகளின்
சில்லரைக் கீற்றோ….
நினைவுகளின் அடர்த்தியில்
சுடுகின்ற
மின் அழுத்தங்களோ…

இதயப் பள்ளத் தாக்குகளில்
தேங்கிக் கிடக்கும் ஒரு
பரவசப் பிணைப்போ…
ஞாபங்கள் ஸ்பரிசித்த
ஒரு தாலாட்டோ….

சிந்தனையை கௌரவித்து
அறிவை புரந்தள்ளும்
மறு ஒளிபரப்போ….
லிட்டுச்சென்ற இடத்தில்
தொட்டுச்செல்ல முடியா
தொடர்ச்சித்திரமோ….

முகவுரையை மொழிபெயர்த்து
முழுதாய் வந்து முன்நின்றாயே….
யாதுமாகியது நான்
இப்படிக்கு “கனவு“
என்று….


முதல் படம் நான் வரைந்தது...நல்லா இருக்கா...???







நிறைவேறாத ஆசைகளின்
நிழல்களோ…
கடந்தகால ஜீவன்விட்ட
தூதோ….

அழியாது தேங்கிக்கிடக்கும்
இன்ப ஊற்றோ…
ஆசைகள் அடங்கா ஆன்மாவின்
ஆறுதல்தானோ….

பூ மொட்டுகளில் மேயும்
சில் வண்டுகளின்
சில்லரைக் கீற்றோ….
நினைவுகளின் அடர்த்தியில்
சுடுகின்ற
மின் அழுத்தங்களோ…

இதயப் பள்ளத் தாக்குகளில்
தேங்கிக் கிடக்கும் ஒரு
பரவசப் பிணைப்போ…
ஞாபங்கள் ஸ்பரிசித்த
ஒரு தாலாட்டோ….

சிந்தனையை கௌரவித்து
அறிவை புரந்தள்ளும்
மறு ஒளிபரப்போ….
லிட்டுச்சென்ற இடத்தில்
தொட்டுச்செல்ல முடியா
தொடர்ச்சித்திரமோ….

முகவுரையை மொழிபெயர்த்து
முழுதாய் வந்து முன்நின்றாயே….
யாதுமாகியது நான்
இப்படிக்கு “கனவு“
என்று….


முதல் படம் நான் வரைந்தது...நல்லா இருக்கா...???