நிறைவேறாத ஆசைகளின்
நிழல்களோ…
கடந்தகால ஜீவன்விட்ட
தூதோ….
அழியாது தேங்கிக்கிடக்கும்
இன்ப ஊற்றோ…
ஆசைகள் அடங்கா ஆன்மாவின்
ஆறுதல்தானோ….
பூ மொட்டுகளில் மேயும்
சில் வண்டுகளின்
சில்லரைக் கீற்றோ….
நினைவுகளின் அடர்த்தியில்
சுடுகின்ற
மின் அழுத்தங்களோ…
இதயப் பள்ளத் தாக்குகளில்
தேங்கிக் கிடக்கும் ஒரு
பரவசப் பிணைப்போ…
ஞாபங்கள் ஸ்பரிசித்த
ஒரு தாலாட்டோ….
சிந்தனையை கௌரவித்து
அறிவை புரந்தள்ளும்
மறு ஒளிபரப்போ….
லிட்டுச்சென்ற இடத்தில்
தொட்டுச்செல்ல முடியா
தொடர்ச்சித்திரமோ….
முகவுரையை மொழிபெயர்த்து
முழுதாய் வந்து முன்நின்றாயே….
யாதுமாகியது நான்
இப்படிக்கு “கனவு“
என்று….
முதல் படம் நான் வரைந்தது...நல்லா இருக்கா...???
8 comments:
யாதுமாகிய கவிதை அருமை.
ஓவியம் அழகாக உள்ளது...
முகவுரையை மொழிபெயர்த்து
முழுதாய் வந்து முன்நின்றாயே….
யாதுமாகியது நான்//அருமையான கவிதை..
வருகைக்கு
நன்றி முனைவர்...
* வேடந்தாங்கல் - கருன் *! said...
முகவுரையை மொழிபெயர்த்து
முழுதாய் வந்து முன்நின்றாயே….
யாதுமாகியது நான்//அருமையான கவிதை..
நன்றி சகோ...
கவிதையும் அருமை.. நீங்கள் வரைந்த படமும் அருமை.. இனிமேல் உங்கள் சொந்த படத்துடன் ( நீங்களே வரந்தவை) கவிதையை எதிர்பார்ர்க்கலாம் போலும்...
நன்றி....
நான் வரைந்த படங்கள் ஒன்றுகூட கைவசம் இல்லை....
முன்னர் போன்று இப்போ வரைய வருதும் இல்லை..
முயற்சிப்போம்...
கவிதை எழுதும் ஆற்றலுடன் படம் வரையும் ஆற்றலும் உள்ளது...வாழ்த்துக்கள்...
Post a Comment