Wednesday, September 7, 2011

என்னை உனக்கு நினைவு வருவதே இல்லையா..!!??

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...


ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....
என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...


ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....