Saturday, October 1, 2011

நீயே என் சுவாசம் 04

நீயே என் சுவாசம் 01
நீயே என் சுவாசம் 02
நீயே என் சுவாசம் 03


அத்தியாயம்-04

ரிஷியின் மூளையை ஏதோ ஒன்று குடைந்து கொண்டே இருந்தது.இரவு உடையில் இருந்தவன் குளியலறைக்குள் சென்று முழுதாய் பத்து நிமிடங்களைக் கரைத்தான்.குளியலை முடித்துக் கொண்டவன் நீல நிர பேன்ட் இற்கும் முழு நீளக்கை சேர்ட்டிற்கும் மாறினான்.

கண்ணாடி முன் நின்று தலையை சீராக வாரிக் கொண்டான்.கண்கள்தான் சிவந்திருந்தன.இரவு முழுதும் மானிஷாவின் நினைவுகளில் தூக்கத்தை தொலைத்திருந்தான்.அவளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை எப்படிவெளிக்கொணர்வது.குழம்பிப்போனான் ரிஷி….

அனைத்தையும் மீறி…அவளது அழகும் ..அடக்கமும் …ரிஷியை பாடாய்ப்படுத்தியது.
“இன்னிக்னு ரெண்டுல ஒன்னு உறுதியா கேட்டுவிட வேண்டியதுதான்..”

தீர்மானமாய்… வண்டியை மருத்துவமனைகக்குச் செலுத்தினான் ரிஷி.
சாலையில் ரிஷியின் வண்டி சீராக ஓடிக்கொண்டிருந்தது….அந்த அமைதி அவனது மனதை வதைத்தது…மெதுவாய் வானலை வரிசையொன்றை முடக்கினான்.….

“ உன்னோடு வாழும்
பொன்னான வரம் பெற்று…
சந்தோச சாரலில்
தெப்பமாய் நனைந்துவிட
தருணம் பார்க்கிறேன்….
அன்பே…..
 என் உயிர் என்றேனும்
 ஒருநாள் உதிரும்…
அப்படி உதிரும்
கணங்களில் கூட….
உன்னுடன் ஒட்டிக்கொள்ளவே
இவள் இதயம் ஏங்கிக் கிடக்கும்…“


இளமை ததும்பும் பெண் குரலொன்று கவிதையின் வரிகளை வாசித்து முடிக்க
அறிவிப்பாளர் பாராட்டித் தீர்த்தார்…
“அடுத்த நேயருக்கான கவிதை வாசிக்கும் வாய்ப்பு இதோ…அழைப்பில் யாரம்மா…”

ரேடியோ ஹலோ… கவிதையில்…அசத்திககொண்டிருக்க…ரிஷி முன்னைய கவிதையில்…மனதைத் தொலைத்திருந்தான்….

காதலின் இம்சையில் நொந்து போனான்…ஏனோ…மனசு ரணமாகிற்று….

மானிஷாவை பிரிய நேரிடுமா….இப்படி நேர்ந்துவிடும் சமயங்களில் என்னிலமை என்னவாகும்….நினைக்கவே பயமாய் இருந்தது ரிஷியிற்கு….

வண்டியின் முன் குறுக்கிடும் சின்ன நாய்க்குட்டி மங்கலாய்த் தெரிய திடீர் ப்ரேக் போட்டு வண்டியை ஒருவாறு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள்…உயிர் மரணவாசலைத் தொட்டுவிட்டு வந்த உணர்வில் உரைந்தே போனான்…..

வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான். மெதுவாய் மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசுப்படுத்திக் கொண்டான்…

“இது சரிப்பட்டுவராது…இதுக்குஏதாச்சுத் செஞ்சேயாகனும்….“

யோசித்தவன்…ரூட்டை மாற்றி…..அர்ஜுன் வீட்டுக்கு வண்டியைத் திருப்பினான்.ஏதாவது தகவல் கிட்டும் என்கிற எதிர்பார்ப்பில்…
அர்ஜுன் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான்.ரிஷி மெதுவாய் குரல் கொடுத்தான்….ம்ஹீம் அவன் அசையவேயில்லை….

“ இந்தாப்பா டீ எடுத்துக்கோ…”

“ தேங்க்யூ பாட்டி…ஏன் இவன் இப்படித்தூங்குறான்…எவ்வளவோ எழுப்பியும் எழும்பவே மாட்டேங்குறான் பாட்டி…”

“ ஏன்டா தூங்க மாட்டான்….ராத்திரி வெளிய போனவன்…காலைலதான் வந்து தூங்குறான்…எங்க போறான்…என்ன பன்றான்னே தெரியமாட்டேங்குதுப்பா…யார்…யாரெல்லாமோ..வீட்டுக்குவராங்க….யார்கூட எல்லாமோ…உரத்து உரத்து பேசுறான்…எனக்கென்னவோ இதெல்லாம் சரியா படலைப்பா…நீயாவது பேசிப்பார்க்கக் கூடாதாப்பா…” அர்ஜுனின் பாட்டி தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தாள்

“ விடுங்க பாட்டி…இப்போ இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே… யாரையும் தப்பா நெனக்க முடியுதில்லை பாட்டி …கவலைப்படாதிங்க….நல்ல பொண்ணாப் பார்த்து சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க…ஒருவேலை அவன் திருந்திடுவான்…”பாட்டியை சமாதானப்படுத்த முயன்றான் ரிஷி….

“ நான் நினைக்கலை..இது சரியாவரும்னு….பொண்ணுங்கன்னாலே எரிஞ்சு விழறான்…கல்யாணத்தப்பத்தி பேசினாலே என்னா குதி குதி குதிக்குறான்…. ….வாழ வேண்டியவங்க..அநியாயமா மேல போயிட்டாங்க… இந்த வயசான காலத்துல எனக்கு என்ன சோதனையோ…”

 கண்களில் வழிந்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு விசும்பினாள் அந்த வயசான பாட்டி.

“ நீங்க கவலைப்படாதிங்க பாட்டி…நான் பாத்துக்கறேன்….”

 தேநீர் பருகி முடிந்த போப்பையை வாங்கிய பாட்டி கண்ணீரைத்துடைத்தபடியே அவ்விடம் விட்டகன்றாள்

ரிஷி அர்ஜுனின் அருகே சென்றான்…

“இவனை தண்ணீரால் அபிஷேகம் பண்ணனால்தான் எழுந்திடுவான் இரிடா வர்ரேன்…”

முணுமுணுத்த ரிஷி…மேசை மீது வைத்திருந்த தண்ணீர் ஜாடியை எடுக்கப் போனவனின் கண்களில் அந்த ஃபோட்டோ தட்டுப்பட திடுக்கிட்டான் ரிஷி….ஃபோட்டோவில் சிவப்பு மையால் ஆழமான பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது…

“ என்ன..மானிஷாவின் ஃபோட்டோ இங்கெப்படி….அதுவும் அர்ஜுனின் அரவனணப்பில்…” புகைப்படத்தை திருப்பிப்பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி…

“ உன்னைப்பழிவாங்காமல் விடமாட்டேனடி…”

அர்ஜுனின் கிறுக்கலைப் பார்த்த ரிஷிற்கு தலைசுற்றாத குறைதான்…மேலன்னத்தில் ஒட்டிய நா நகர மறுத்தது…இதயம் படபடவென அடிக்கத் துவங்கியது…

என்ன நடக்கறதென்பதை ரிஷியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை….மானிஷா ஏதோ ஆபத்தில் சிக்கி இருக்கிறாள் என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டான்….

வடைபெற்ற ரிஷி மருத்துவமனைக்குப் போகப்பிகடிக்காமல் தன் வண்டியை கடற்கரைக்கும் போகும் சாலைக்குள் ஊரவிட்டான்….

“அர்ஜுன் உனக்காய் பீச்சில் காத்திருக்கிறேன்…எத்தனை மணியானாலும் பரவாயில்லை …எழுந்ததும் வந்துவிடு…”

 வொய்ஸ் மெயில் ஒன்றை அனுப்பிவிட்டு காத்திருற்தான் அர்ஜுனுக்காக.

                                                                                                                         தொடரும்....

                                                                                                              நீயே என் சுவாசம் 05
நீயே என் சுவாசம் 01
நீயே என் சுவாசம் 02
நீயே என் சுவாசம் 03


அத்தியாயம்-04

ரிஷியின் மூளையை ஏதோ ஒன்று குடைந்து கொண்டே இருந்தது.இரவு உடையில் இருந்தவன் குளியலறைக்குள் சென்று முழுதாய் பத்து நிமிடங்களைக் கரைத்தான்.குளியலை முடித்துக் கொண்டவன் நீல நிர பேன்ட் இற்கும் முழு நீளக்கை சேர்ட்டிற்கும் மாறினான்.

கண்ணாடி முன் நின்று தலையை சீராக வாரிக் கொண்டான்.கண்கள்தான் சிவந்திருந்தன.இரவு முழுதும் மானிஷாவின் நினைவுகளில் தூக்கத்தை தொலைத்திருந்தான்.அவளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை எப்படிவெளிக்கொணர்வது.குழம்பிப்போனான் ரிஷி….

அனைத்தையும் மீறி…அவளது அழகும் ..அடக்கமும் …ரிஷியை பாடாய்ப்படுத்தியது.
“இன்னிக்னு ரெண்டுல ஒன்னு உறுதியா கேட்டுவிட வேண்டியதுதான்..”

தீர்மானமாய்… வண்டியை மருத்துவமனைகக்குச் செலுத்தினான் ரிஷி.
சாலையில் ரிஷியின் வண்டி சீராக ஓடிக்கொண்டிருந்தது….அந்த அமைதி அவனது மனதை வதைத்தது…மெதுவாய் வானலை வரிசையொன்றை முடக்கினான்.….

“ உன்னோடு வாழும்
பொன்னான வரம் பெற்று…
சந்தோச சாரலில்
தெப்பமாய் நனைந்துவிட
தருணம் பார்க்கிறேன்….
அன்பே…..
 என் உயிர் என்றேனும்
 ஒருநாள் உதிரும்…
அப்படி உதிரும்
கணங்களில் கூட….
உன்னுடன் ஒட்டிக்கொள்ளவே
இவள் இதயம் ஏங்கிக் கிடக்கும்…“


இளமை ததும்பும் பெண் குரலொன்று கவிதையின் வரிகளை வாசித்து முடிக்க
அறிவிப்பாளர் பாராட்டித் தீர்த்தார்…
“அடுத்த நேயருக்கான கவிதை வாசிக்கும் வாய்ப்பு இதோ…அழைப்பில் யாரம்மா…”

ரேடியோ ஹலோ… கவிதையில்…அசத்திககொண்டிருக்க…ரிஷி முன்னைய கவிதையில்…மனதைத் தொலைத்திருந்தான்….

காதலின் இம்சையில் நொந்து போனான்…ஏனோ…மனசு ரணமாகிற்று….

மானிஷாவை பிரிய நேரிடுமா….இப்படி நேர்ந்துவிடும் சமயங்களில் என்னிலமை என்னவாகும்….நினைக்கவே பயமாய் இருந்தது ரிஷியிற்கு….

வண்டியின் முன் குறுக்கிடும் சின்ன நாய்க்குட்டி மங்கலாய்த் தெரிய திடீர் ப்ரேக் போட்டு வண்டியை ஒருவாறு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள்…உயிர் மரணவாசலைத் தொட்டுவிட்டு வந்த உணர்வில் உரைந்தே போனான்…..

வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான். மெதுவாய் மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசுப்படுத்திக் கொண்டான்…

“இது சரிப்பட்டுவராது…இதுக்குஏதாச்சுத் செஞ்சேயாகனும்….“

யோசித்தவன்…ரூட்டை மாற்றி…..அர்ஜுன் வீட்டுக்கு வண்டியைத் திருப்பினான்.ஏதாவது தகவல் கிட்டும் என்கிற எதிர்பார்ப்பில்…
அர்ஜுன் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான்.ரிஷி மெதுவாய் குரல் கொடுத்தான்….ம்ஹீம் அவன் அசையவேயில்லை….

“ இந்தாப்பா டீ எடுத்துக்கோ…”

“ தேங்க்யூ பாட்டி…ஏன் இவன் இப்படித்தூங்குறான்…எவ்வளவோ எழுப்பியும் எழும்பவே மாட்டேங்குறான் பாட்டி…”

“ ஏன்டா தூங்க மாட்டான்….ராத்திரி வெளிய போனவன்…காலைலதான் வந்து தூங்குறான்…எங்க போறான்…என்ன பன்றான்னே தெரியமாட்டேங்குதுப்பா…யார்…யாரெல்லாமோ..வீட்டுக்குவராங்க….யார்கூட எல்லாமோ…உரத்து உரத்து பேசுறான்…எனக்கென்னவோ இதெல்லாம் சரியா படலைப்பா…நீயாவது பேசிப்பார்க்கக் கூடாதாப்பா…” அர்ஜுனின் பாட்டி தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தாள்

“ விடுங்க பாட்டி…இப்போ இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே… யாரையும் தப்பா நெனக்க முடியுதில்லை பாட்டி …கவலைப்படாதிங்க….நல்ல பொண்ணாப் பார்த்து சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க…ஒருவேலை அவன் திருந்திடுவான்…”பாட்டியை சமாதானப்படுத்த முயன்றான் ரிஷி….

“ நான் நினைக்கலை..இது சரியாவரும்னு….பொண்ணுங்கன்னாலே எரிஞ்சு விழறான்…கல்யாணத்தப்பத்தி பேசினாலே என்னா குதி குதி குதிக்குறான்…. ….வாழ வேண்டியவங்க..அநியாயமா மேல போயிட்டாங்க… இந்த வயசான காலத்துல எனக்கு என்ன சோதனையோ…”

 கண்களில் வழிந்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு விசும்பினாள் அந்த வயசான பாட்டி.

“ நீங்க கவலைப்படாதிங்க பாட்டி…நான் பாத்துக்கறேன்….”

 தேநீர் பருகி முடிந்த போப்பையை வாங்கிய பாட்டி கண்ணீரைத்துடைத்தபடியே அவ்விடம் விட்டகன்றாள்

ரிஷி அர்ஜுனின் அருகே சென்றான்…

“இவனை தண்ணீரால் அபிஷேகம் பண்ணனால்தான் எழுந்திடுவான் இரிடா வர்ரேன்…”

முணுமுணுத்த ரிஷி…மேசை மீது வைத்திருந்த தண்ணீர் ஜாடியை எடுக்கப் போனவனின் கண்களில் அந்த ஃபோட்டோ தட்டுப்பட திடுக்கிட்டான் ரிஷி….ஃபோட்டோவில் சிவப்பு மையால் ஆழமான பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது…

“ என்ன..மானிஷாவின் ஃபோட்டோ இங்கெப்படி….அதுவும் அர்ஜுனின் அரவனணப்பில்…” புகைப்படத்தை திருப்பிப்பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி…

“ உன்னைப்பழிவாங்காமல் விடமாட்டேனடி…”

அர்ஜுனின் கிறுக்கலைப் பார்த்த ரிஷிற்கு தலைசுற்றாத குறைதான்…மேலன்னத்தில் ஒட்டிய நா நகர மறுத்தது…இதயம் படபடவென அடிக்கத் துவங்கியது…

என்ன நடக்கறதென்பதை ரிஷியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை….மானிஷா ஏதோ ஆபத்தில் சிக்கி இருக்கிறாள் என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டான்….

வடைபெற்ற ரிஷி மருத்துவமனைக்குப் போகப்பிகடிக்காமல் தன் வண்டியை கடற்கரைக்கும் போகும் சாலைக்குள் ஊரவிட்டான்….

“அர்ஜுன் உனக்காய் பீச்சில் காத்திருக்கிறேன்…எத்தனை மணியானாலும் பரவாயில்லை …எழுந்ததும் வந்துவிடு…”

 வொய்ஸ் மெயில் ஒன்றை அனுப்பிவிட்டு காத்திருற்தான் அர்ஜுனுக்காக.

                                                                                                                         தொடரும்....

                                                                                                              நீயே என் சுவாசம் 05

Monday, September 26, 2011

நீயே என் சுவாசம் 03


அத்தியாயம் -03
            
இரவு உடைக்கு மாறினாள் மானிஷா…
 மெல்லிய ஒப்பணையில் மிகவும் அழகாகத் தெரிந்தவளது மனது
 வலிகளினால் நிரம்பி வழிந்தது…
ஏனோ அறையிலிருக்கப் பிடிக்கவில்லை முன் கூடத்துக்கு வந்து தொ.கா.வை முடுக்கிவிட்டு ஸோஃபாவில் அமர்ந்தாள்.

திரையில் பெயர்கள் ஓடின..ஏதேதோ படங்கள் போயின ….மனதில் ஒன்றும் ஒட்டவில்லை…காலை ரிஷியுடனான உரையாடல் ஞாபகத்தில் வந்து பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.

“ சீ….என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன்…ரிஷி ரொம்பவே கவலைப்பட்டிருப்பாரோ? என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது…ரிஷி…. என்னை மன்னிச்சிடுங்க….என் காதலை சொல்கிற நிலமையில் நான் இல்லை ரிஷி…”

 தன்னை நொந்து கொண்டாள்.தனக்குத்தானே புலம்பித்தீர்த்தாள்.
அவளது புலம்பலைத் தகர்த்தெரிந்தது வீட்டு அலைப்பு மணி.தன்னை சுதாகரித்துக்கொண்டவள் மெல்லப்போய் கதவைத்திறந்தாள்

குடிபோதையில் தள்ளாடியபடி நின்றிருந்தான் பரணி.
பரணியைக் கண்டமாத்திரத்தில் மானிஷாவின் முகம் சட்டெனக் கலையிழந்தது.

“ என்னடா கண்ணு…இப்படி முறைக்குறே…வழியை விடுடா என் செல்லம்” 

வார்த்தைகள்…வழுக்கி விழுந்தன.
சாராய வாசணை குப்பென்று வீச முகம்சுழித்தாள் இரண்டடி பின்னெடுத்துவைத்தாள் மானிஷா.

“ குடிச்சருக்கீங்களா….” 

ஒற்றைவரியில் சுருக்கிக்கொண்டாள் பேச்சை.

“ ஆமாம்…குடிச்சேன்..இப்போ அதுக்கு என்னாங்கறே…இதெல்லாத்துக்கும் உன்கிட்ட அனுமதி கேக்கனுமா என்ன?...வழியை விடுடி….”

தள்ளாடியபடியே வந்த பரணி தொப்பென்று ஸோஃபாவில் சரிந்தான்.கழுத்தை நெரித்த டையை மெதுவாய் தளர்த்தினான்.
ஷேட் பொத்தானை தடுமாறியபடியே கழட்டினான்…
கதவோரத்தில் இருந்து தன்னை முழுதாய் மறைத்து தலையை மட்டும் நீட்டிக் காத்திருந்தாள் மானிஷா அவனது பதிலுக்காய்.

“என்ன மொறச்சிப் பார்க்குறே…போய்த் தூங்கு…துணைக்குகூப்பிட்டா  வந்திரவா போறே…அப்போ ஏன்டி பார்த்திட்டு இருக்கே…” 

சலித்துக் கொண்டான் பரணி.

“ இல்லை…சாப்பாடு…எடுத்து.. வைக்கட்டுமா..ன்னு…கேக்கத்தான்…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணரினாள்.

“ ஐயோ…ஐயோ…இது என்னடா புதுசாருக்கு….இத்தனை நாள் இல்லாத அக்கரை….இப்பமட்டும் எப்படி…எங்கேயோ இடிக்குதே….” 

பெரிதாகச்சிரித்தபடியே…மானிஷாவை கிரக்கமாய்ப் பார்த்தான்

“ நீ என்கிட்ட எதையோ எதிர்பார்க்குறே…அப்படித்தானே….”
பரணி மீண்டும் மானிஷாவை வம்புக்கு இழுத்தான்.

“ தெரிஞ்சிருந்தும் ஏன் என்னை இம்சிக்குறே…உன்னை நம்பிவந்ததுக்கு இதுவா நீ தரும் பரிசு…அவளைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா..?” 

தன் இயலாமையை நொந்து கண்ணீர் விட்டாள்…

“அப்போ..இன்னிக்கு நான் உன்கூட தங்குறதுல ஆட்சேபணை இல்லைங்குறே…அப்படித்தானே…”

ஒரு மார்க்கமாய் தள்ளாடியபடி எழுந்தான் பரணி….

“ சீ…இப்படிப்பேச வெக்கமாயில்லை…”

போதை வேலை செய்ய ஆரம்பித்திருப்பதைப் புரிந்த மானிஷா…கடுப்பாகி சட்டென்று திரும்பி தன் அறைக்கதவை தாளிட்டுக் கொண்டாள்

“…சொந்தப் பொண்டாட்டிக்கூட இப்படிப்பேசக்கூடாதா….இப்படி மொறக்கிறாளே… என்னடா உலகமிது” 

சலித்துக்கொண்ட பரணி தள்ளாடியபடி தன் அறைக்குப் போய்…கட்டிலில் விழுந்து உடனே உறங்கிப்போனான்.

                                                                  தொடரும்....


                                                                   நீயே என் சுவாசம் 04

அத்தியாயம் -03
            
இரவு உடைக்கு மாறினாள் மானிஷா…
 மெல்லிய ஒப்பணையில் மிகவும் அழகாகத் தெரிந்தவளது மனது
 வலிகளினால் நிரம்பி வழிந்தது…
ஏனோ அறையிலிருக்கப் பிடிக்கவில்லை முன் கூடத்துக்கு வந்து தொ.கா.வை முடுக்கிவிட்டு ஸோஃபாவில் அமர்ந்தாள்.

திரையில் பெயர்கள் ஓடின..ஏதேதோ படங்கள் போயின ….மனதில் ஒன்றும் ஒட்டவில்லை…காலை ரிஷியுடனான உரையாடல் ஞாபகத்தில் வந்து பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.

“ சீ….என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன்…ரிஷி ரொம்பவே கவலைப்பட்டிருப்பாரோ? என்ன இருந்தாலும் நான் அப்படி பேசி இருக்கக்கூடாது…ரிஷி…. என்னை மன்னிச்சிடுங்க….என் காதலை சொல்கிற நிலமையில் நான் இல்லை ரிஷி…”

 தன்னை நொந்து கொண்டாள்.தனக்குத்தானே புலம்பித்தீர்த்தாள்.
அவளது புலம்பலைத் தகர்த்தெரிந்தது வீட்டு அலைப்பு மணி.தன்னை சுதாகரித்துக்கொண்டவள் மெல்லப்போய் கதவைத்திறந்தாள்

குடிபோதையில் தள்ளாடியபடி நின்றிருந்தான் பரணி.
பரணியைக் கண்டமாத்திரத்தில் மானிஷாவின் முகம் சட்டெனக் கலையிழந்தது.

“ என்னடா கண்ணு…இப்படி முறைக்குறே…வழியை விடுடா என் செல்லம்” 

வார்த்தைகள்…வழுக்கி விழுந்தன.
சாராய வாசணை குப்பென்று வீச முகம்சுழித்தாள் இரண்டடி பின்னெடுத்துவைத்தாள் மானிஷா.

“ குடிச்சருக்கீங்களா….” 

ஒற்றைவரியில் சுருக்கிக்கொண்டாள் பேச்சை.

“ ஆமாம்…குடிச்சேன்..இப்போ அதுக்கு என்னாங்கறே…இதெல்லாத்துக்கும் உன்கிட்ட அனுமதி கேக்கனுமா என்ன?...வழியை விடுடி….”

தள்ளாடியபடியே வந்த பரணி தொப்பென்று ஸோஃபாவில் சரிந்தான்.கழுத்தை நெரித்த டையை மெதுவாய் தளர்த்தினான்.
ஷேட் பொத்தானை தடுமாறியபடியே கழட்டினான்…
கதவோரத்தில் இருந்து தன்னை முழுதாய் மறைத்து தலையை மட்டும் நீட்டிக் காத்திருந்தாள் மானிஷா அவனது பதிலுக்காய்.

“என்ன மொறச்சிப் பார்க்குறே…போய்த் தூங்கு…துணைக்குகூப்பிட்டா  வந்திரவா போறே…அப்போ ஏன்டி பார்த்திட்டு இருக்கே…” 

சலித்துக் கொண்டான் பரணி.

“ இல்லை…சாப்பாடு…எடுத்து.. வைக்கட்டுமா..ன்னு…கேக்கத்தான்…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் திணரினாள்.

“ ஐயோ…ஐயோ…இது என்னடா புதுசாருக்கு….இத்தனை நாள் இல்லாத அக்கரை….இப்பமட்டும் எப்படி…எங்கேயோ இடிக்குதே….” 

பெரிதாகச்சிரித்தபடியே…மானிஷாவை கிரக்கமாய்ப் பார்த்தான்

“ நீ என்கிட்ட எதையோ எதிர்பார்க்குறே…அப்படித்தானே….”
பரணி மீண்டும் மானிஷாவை வம்புக்கு இழுத்தான்.

“ தெரிஞ்சிருந்தும் ஏன் என்னை இம்சிக்குறே…உன்னை நம்பிவந்ததுக்கு இதுவா நீ தரும் பரிசு…அவளைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா..?” 

தன் இயலாமையை நொந்து கண்ணீர் விட்டாள்…

“அப்போ..இன்னிக்கு நான் உன்கூட தங்குறதுல ஆட்சேபணை இல்லைங்குறே…அப்படித்தானே…”

ஒரு மார்க்கமாய் தள்ளாடியபடி எழுந்தான் பரணி….

“ சீ…இப்படிப்பேச வெக்கமாயில்லை…”

போதை வேலை செய்ய ஆரம்பித்திருப்பதைப் புரிந்த மானிஷா…கடுப்பாகி சட்டென்று திரும்பி தன் அறைக்கதவை தாளிட்டுக் கொண்டாள்

“…சொந்தப் பொண்டாட்டிக்கூட இப்படிப்பேசக்கூடாதா….இப்படி மொறக்கிறாளே… என்னடா உலகமிது” 

சலித்துக்கொண்ட பரணி தள்ளாடியபடி தன் அறைக்குப் போய்…கட்டிலில் விழுந்து உடனே உறங்கிப்போனான்.

                                                                  தொடரும்....


                                                                   நீயே என் சுவாசம் 04

உறவு


         

வெளியே தன் ஹொன்டாவை ஸ்டேன்ட் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் ஸாதிக்.முன் வராண்டாவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த பரீனா குர்ஆனை மூடி புக் ஸெல்பில் வைத்துவிட்டு கணவனின் அருகில் வந்ததும்..

”குழந்தைங்க சாப்பிட்டாச்சா….” ஸாதிக் கேற்க

“ஆமாங்க…அதெல்லாம் ஆச்சு… மஃரிப்கும் அதான் சொல்லியாச்சி…ஒரு நாளுமில்லாம இன்டக்கி ஏங்க இப்படி லேட்……”

”பணம் தேடி கொஞ்சம் அழைய வேண்டியதாயிற்று…புள்ளைங்க ரெண்டும் இங்க படிக்குது…நீ முதல்ல ஸ்ட்ரோங் டீ ஒன்டு போட்டு கொண்டு வா…”

ஸாதிக் அறைக்குப் போய் உடைமாற்றி  குளியலை முடித்துக் கொண்டு வந்தான்.குழந்தைகள் இரண்டும் அவனுடன் கொஞ்சம் விளையாடிவிட்டு மடிமேல் தூங்கவும் விரிப்பில் கொண்டு போய் படுக்க வைத்தான் ஸாதிக்.

“பரீனா…இந்த மாலை நல்லா இருக்காண்ணு பாரு…”

சமையல் கட்டிலிருந்து வந்தவள் 
” உங்க தங்கச்சீக்கா…அவ தந்ததவிட இது பாரமாவும் பார்வையாவும் இருக்கே…இப்ப நமக்கு இருக்கிற நெலமயில…ஒரு மஞ்சாடி அதிகம்ணாலும் கஸ்டம்தானே…இதுல ஒரு பவுன் அதிகமா இருக்குமா??? எப்படிங்க…”

“ பாரத்தை கரெக்டா கண்டுபுடிச்சிட்டியே…ஆமா…
நீ ஏன் அப்படி நெனக்கிறே…கஷ்டம்னு போய் நின்னப்ப என் தங்கச்சிதானே மாலையை தூக்கி தந்தாள்.நான்தானே அத திருப்பித் தர்ரேன்னு சொல்லி நாளைய திகதியை கொடுத்துட்டு வந்தேன்…”

 ” எனக்கு புரியுதுங்க…நீங் வெளிநாட்டுல சம்பாதிச்ச தெல்லாம் அவுங்களுக்காகத்தானே செலவழிச்சீங்க….சீர் செஞ்சு…கல்யாணம் பண்ணிவெச்சு…வீடும் கட்டிக்கொடுத்தீங்க…நம்ம வீடு கட்ட வாங்கின கடன் இது..வீட்டு வேலையே இன்னும் முடியலை…இப்ப நாம இருக்கிற நிலமைல….இந்த மாலையை உங்க தங்கச்சி வாங்கிக் கொண்டால்…அவ மனுஷியே இல்லை புரிஞ்சுக்குங்க..“பரீனா இயலாமையில் புலம்பவும்….
ஸாதிக்கின் குரல் உயர்ந்தது…

“ இந்தப் பொண்டாட்டிமாரே இப்படித்தான்…எங்க குடும்பத்துக்கு செலவழிக்குறோம்னாலே வயிறு எரிஞ்சுடுமே…”

” உண்மைய சொன்னா ஏங்க கோபப்படுரீங்க…அவ உங்களிடம் ஒன்றைப்போட்டு ஒன்பதைக் கரக்கப்பாக்குறா…உங்க முன்னாடி நடிக்குறா…என்னை நம்புங்க…“

பரீனா கூறி முடிக்கவில்லை அவளது கன்னங்களை ஸாதிக்கின் கரம் பதம் பார்த்துவிட்டது…

”இனிமே அவளப்பத்தி ஒரு வார்த்தை சொன்னே…நடக்குறதே வேற….நாளைக்கு நீ என்னுடன் என் தங்கச்சி வீட்டுக்குப் போக வர்ரே…அவ என்ன சொல்றான்னும் நீ கேக்கத்தான் போறே…”

ஸாதிக் விருட்டென்று அவ்விடத்தைவிட்டு நகர்ந்து அறைக்குள் சென்று விளக்கை அணைத்தான்….
பரீனா கண்ணீர் வடியும் கன்னத்துடனும்…மனதில் பட்ட காயத்தையும் பொருற்படுத்தாது…இறைவனைத் தொழுது…கணவனின் வெள்ளை மனசை புரிந்து கொள்ளாத உள்ளங்களை சபித்தாள்.மனித சுபாவங்களை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அளிக்கும்படி இறைவனிடம் மன்றாடினாள்…தொழுத பாயில் அழுதழுதே உறங்கிப்போனாள்..
மறுநாள் பொழுதும் புலர்ந்தது….கணவரின் தங்கை வீட்டுக்கும் வந்தாயிற்று…

”இந்தாம்மா உன் நகை…சொன்ன திகதிக்குள்  தந்திட்டேன் பார்த்தியா” 

ஸாதிக் கூறிய படியே மாலையை தங்கையின் கையில் திணித்தான்.

”ஐயோ வேண்டாம் நாநா …அவருக்கு தெரிஞ்சா திட்டுவாரு…நீங்க எனக்கு எவவளவோ செஞ்சிருக்கீங்க…”

விடாப்பிடியாக மறுத்தாள்…ஸாதிக் விடவில்லை எப்படியோ தங்கையை ஒத்துக்கொள்ளவைத்தான்..வெற்றிப் பெருமிதத்தில் மனைவி மீது சுட்டெரிக்கும் அணல் பார்வைகளை வீசிக்கொண்டிருந்தான்…

”தங்கச்சி இன்னக்கி இங்க விருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போறோம்…நீங்க போய் சமைங்க நான் ஆட்டுக்கறி எடுக்க டௌனுக்குப்போய் வர்றேன்…”

ஸாதிக் கிளம்பவும் இருவரும் சமையல் கட்டுக்குள் நுழைந்தார்கள்.

”என்ன பரீன மதினி…மாலை நான் தந்த அளவு வெய்ட்தானே…”
மெல்லப் பேச்சைக் கொடுத்தாள்

”என்னமதினி அப்படி கேட்டுட்டீங்க உங்க நாநவபத்தி உங்களுக்குத் தெரியாவா? ஒரு பவுன் கூடுதலாவே எடுத்திருக்கிறாரு…“

”இல்ல…வெய்ட் கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிறி இருக்கு… எதுக்கும் நான் நாளைக்கு நகைக்கடைக்குப்கோய் வெய்ட் பார்த்துட்டு சொல்லி அனுப்புறேன்…வெய்ட் கொஞ்சம் அங்கால இங்கால ஆச்சுன்னா…மாத்தித் தந்திடுங்க என்ன?...இப்படி சின்னச்சின்ன விசயங்களை வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்தனுமென்றில்லை…நாநவும் தெரிஞ்சுக்கொள்ள தேவலை…” 

பேச்சோடு பேச்சாய் கணவனின் தங்கை கூறுவதைக் கேட்கயில்…ஆச்சர்யமென்றோ..அதிசமென்றோ…பரீனாவுக்குத் தோண்றவில்லை…
ஆனால் ஆட்டுக்கறி எத்தனை கிலோ வேண்டுமென்று கேற்க… திரும்பி வந்த ஸாதிக்கிற்குத்தான்…….மனசு வெடித்துச்சிதறியது…. மெளனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மனைவி பரீனாவை பரிதாபமாய் பார்த்துவிட்டு…வந்த சுவடுதெரியாமல் திரும்பிப்போனான் ஸாதிக்

           (  யாவும் கற்பணை  )



நன்றி வேகம் பதிப்பகம்...

    வேகம் பதிப்பகம்: சிறுகதை: ............................................................................................................................ ...


         

வெளியே தன் ஹொன்டாவை ஸ்டேன்ட் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் ஸாதிக்.முன் வராண்டாவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த பரீனா குர்ஆனை மூடி புக் ஸெல்பில் வைத்துவிட்டு கணவனின் அருகில் வந்ததும்..

”குழந்தைங்க சாப்பிட்டாச்சா….” ஸாதிக் கேற்க

“ஆமாங்க…அதெல்லாம் ஆச்சு… மஃரிப்கும் அதான் சொல்லியாச்சி…ஒரு நாளுமில்லாம இன்டக்கி ஏங்க இப்படி லேட்……”

”பணம் தேடி கொஞ்சம் அழைய வேண்டியதாயிற்று…புள்ளைங்க ரெண்டும் இங்க படிக்குது…நீ முதல்ல ஸ்ட்ரோங் டீ ஒன்டு போட்டு கொண்டு வா…”

ஸாதிக் அறைக்குப் போய் உடைமாற்றி  குளியலை முடித்துக் கொண்டு வந்தான்.குழந்தைகள் இரண்டும் அவனுடன் கொஞ்சம் விளையாடிவிட்டு மடிமேல் தூங்கவும் விரிப்பில் கொண்டு போய் படுக்க வைத்தான் ஸாதிக்.

“பரீனா…இந்த மாலை நல்லா இருக்காண்ணு பாரு…”

சமையல் கட்டிலிருந்து வந்தவள் 
” உங்க தங்கச்சீக்கா…அவ தந்ததவிட இது பாரமாவும் பார்வையாவும் இருக்கே…இப்ப நமக்கு இருக்கிற நெலமயில…ஒரு மஞ்சாடி அதிகம்ணாலும் கஸ்டம்தானே…இதுல ஒரு பவுன் அதிகமா இருக்குமா??? எப்படிங்க…”

“ பாரத்தை கரெக்டா கண்டுபுடிச்சிட்டியே…ஆமா…
நீ ஏன் அப்படி நெனக்கிறே…கஷ்டம்னு போய் நின்னப்ப என் தங்கச்சிதானே மாலையை தூக்கி தந்தாள்.நான்தானே அத திருப்பித் தர்ரேன்னு சொல்லி நாளைய திகதியை கொடுத்துட்டு வந்தேன்…”

 ” எனக்கு புரியுதுங்க…நீங் வெளிநாட்டுல சம்பாதிச்ச தெல்லாம் அவுங்களுக்காகத்தானே செலவழிச்சீங்க….சீர் செஞ்சு…கல்யாணம் பண்ணிவெச்சு…வீடும் கட்டிக்கொடுத்தீங்க…நம்ம வீடு கட்ட வாங்கின கடன் இது..வீட்டு வேலையே இன்னும் முடியலை…இப்ப நாம இருக்கிற நிலமைல….இந்த மாலையை உங்க தங்கச்சி வாங்கிக் கொண்டால்…அவ மனுஷியே இல்லை புரிஞ்சுக்குங்க..“பரீனா இயலாமையில் புலம்பவும்….
ஸாதிக்கின் குரல் உயர்ந்தது…

“ இந்தப் பொண்டாட்டிமாரே இப்படித்தான்…எங்க குடும்பத்துக்கு செலவழிக்குறோம்னாலே வயிறு எரிஞ்சுடுமே…”

” உண்மைய சொன்னா ஏங்க கோபப்படுரீங்க…அவ உங்களிடம் ஒன்றைப்போட்டு ஒன்பதைக் கரக்கப்பாக்குறா…உங்க முன்னாடி நடிக்குறா…என்னை நம்புங்க…“

பரீனா கூறி முடிக்கவில்லை அவளது கன்னங்களை ஸாதிக்கின் கரம் பதம் பார்த்துவிட்டது…

”இனிமே அவளப்பத்தி ஒரு வார்த்தை சொன்னே…நடக்குறதே வேற….நாளைக்கு நீ என்னுடன் என் தங்கச்சி வீட்டுக்குப் போக வர்ரே…அவ என்ன சொல்றான்னும் நீ கேக்கத்தான் போறே…”

ஸாதிக் விருட்டென்று அவ்விடத்தைவிட்டு நகர்ந்து அறைக்குள் சென்று விளக்கை அணைத்தான்….
பரீனா கண்ணீர் வடியும் கன்னத்துடனும்…மனதில் பட்ட காயத்தையும் பொருற்படுத்தாது…இறைவனைத் தொழுது…கணவனின் வெள்ளை மனசை புரிந்து கொள்ளாத உள்ளங்களை சபித்தாள்.மனித சுபாவங்களை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அளிக்கும்படி இறைவனிடம் மன்றாடினாள்…தொழுத பாயில் அழுதழுதே உறங்கிப்போனாள்..
மறுநாள் பொழுதும் புலர்ந்தது….கணவரின் தங்கை வீட்டுக்கும் வந்தாயிற்று…

”இந்தாம்மா உன் நகை…சொன்ன திகதிக்குள்  தந்திட்டேன் பார்த்தியா” 

ஸாதிக் கூறிய படியே மாலையை தங்கையின் கையில் திணித்தான்.

”ஐயோ வேண்டாம் நாநா …அவருக்கு தெரிஞ்சா திட்டுவாரு…நீங்க எனக்கு எவவளவோ செஞ்சிருக்கீங்க…”

விடாப்பிடியாக மறுத்தாள்…ஸாதிக் விடவில்லை எப்படியோ தங்கையை ஒத்துக்கொள்ளவைத்தான்..வெற்றிப் பெருமிதத்தில் மனைவி மீது சுட்டெரிக்கும் அணல் பார்வைகளை வீசிக்கொண்டிருந்தான்…

”தங்கச்சி இன்னக்கி இங்க விருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போறோம்…நீங்க போய் சமைங்க நான் ஆட்டுக்கறி எடுக்க டௌனுக்குப்போய் வர்றேன்…”

ஸாதிக் கிளம்பவும் இருவரும் சமையல் கட்டுக்குள் நுழைந்தார்கள்.

”என்ன பரீன மதினி…மாலை நான் தந்த அளவு வெய்ட்தானே…”
மெல்லப் பேச்சைக் கொடுத்தாள்

”என்னமதினி அப்படி கேட்டுட்டீங்க உங்க நாநவபத்தி உங்களுக்குத் தெரியாவா? ஒரு பவுன் கூடுதலாவே எடுத்திருக்கிறாரு…“

”இல்ல…வெய்ட் கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிறி இருக்கு… எதுக்கும் நான் நாளைக்கு நகைக்கடைக்குப்கோய் வெய்ட் பார்த்துட்டு சொல்லி அனுப்புறேன்…வெய்ட் கொஞ்சம் அங்கால இங்கால ஆச்சுன்னா…மாத்தித் தந்திடுங்க என்ன?...இப்படி சின்னச்சின்ன விசயங்களை வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்தனுமென்றில்லை…நாநவும் தெரிஞ்சுக்கொள்ள தேவலை…” 

பேச்சோடு பேச்சாய் கணவனின் தங்கை கூறுவதைக் கேட்கயில்…ஆச்சர்யமென்றோ..அதிசமென்றோ…பரீனாவுக்குத் தோண்றவில்லை…
ஆனால் ஆட்டுக்கறி எத்தனை கிலோ வேண்டுமென்று கேற்க… திரும்பி வந்த ஸாதிக்கிற்குத்தான்…….மனசு வெடித்துச்சிதறியது…. மெளனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மனைவி பரீனாவை பரிதாபமாய் பார்த்துவிட்டு…வந்த சுவடுதெரியாமல் திரும்பிப்போனான் ஸாதிக்

           (  யாவும் கற்பணை  )



நன்றி வேகம் பதிப்பகம்...

    வேகம் பதிப்பகம்: சிறுகதை: ............................................................................................................................ ...

Sunday, September 25, 2011

நன்றி ஜனனி