Thursday, August 11, 2011

நீ நானாகும் தருணம்



நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…



நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…

No comments: