Monday, August 1, 2011

நீயாகு……




உன்னை உனக்குத்
தெரிகிறதா..
தோழா…
வெற்றிகள்
எதுவென்பதையும்
தோல்விகள்
இதுதானென்பதையம்
நீ… உணராதவரை
உன்னால்
உன்னை அறிமுகப்படுத்த
முடியாது…
இந்நிலை எண்ணி
கலங்குவதில்
காலத்தைக்
காயப்படுத்திக்கொள்ளாதே…
சரிவெல்லாம்
வெற்றிப்படிகளென்றும்...
அவமானங்கள்
கைத்தடிகளென்றும்...
உள்ளம்
உள்வாங்காதவரை
உன்னால்
எழுந்திருக்க
முடியுமென்கிறாயா…?
நிலவினை முத்தமிடத்
துடிக்கும்
மேகக்கூட்டத்தின்
கரங்களைத் தடுக்வும்..
மேனியைத்தழுவும்
தென்றலுக்கு
மறுப்புக்கடிதம் நீட்டவும்...
நீ
துணியாதவரை….

நீ…
நீயாகலாம்…

000 000 000



உன்னை உனக்குத்
தெரிகிறதா..
தோழா…
வெற்றிகள்
எதுவென்பதையும்
தோல்விகள்
இதுதானென்பதையம்
நீ… உணராதவரை
உன்னால்
உன்னை அறிமுகப்படுத்த
முடியாது…
இந்நிலை எண்ணி
கலங்குவதில்
காலத்தைக்
காயப்படுத்திக்கொள்ளாதே…
சரிவெல்லாம்
வெற்றிப்படிகளென்றும்...
அவமானங்கள்
கைத்தடிகளென்றும்...
உள்ளம்
உள்வாங்காதவரை
உன்னால்
எழுந்திருக்க
முடியுமென்கிறாயா…?
நிலவினை முத்தமிடத்
துடிக்கும்
மேகக்கூட்டத்தின்
கரங்களைத் தடுக்வும்..
மேனியைத்தழுவும்
தென்றலுக்கு
மறுப்புக்கடிதம் நீட்டவும்...
நீ
துணியாதவரை….

நீ…
நீயாகலாம்…

000 000 000

No comments: